Followers

Tuesday, December 13, 2016

ராகு கேது பரிகாரம் பகுதி 7


வணக்கம்!
          ராகு கேது பரிகாரத்திற்க்கு என்று ஜாதகம் அனுப்பியவர்களில் பாதி பேர் ஜாதகத்தை மட்டுமே அனுப்பியுள்ளனர். கட்டணத்தை செலுத்தவில்லை. கட்டணம் செலுத்தவில்லை என்பது வருத்தம் இல்லை ஆனால் அந்த கட்டணத்தை கூட செலுத்தவிடாமல் பல பேர்களை ராகு கேது பகவானே தடுக்கிறார் என்பது தான் உண்மை.

நேற்று பல பேர் என்னை கூப்பிட்டு சார் சென்னையில் புயல் மின்சாரம் இல்லை அதனால் பணத்தை செலுத்தமுடியவில்லை என்று சொன்னார்கள். பல தடைகளை பற்றி சொன்னார்கள்.

ராகு கேது என்றாலே இப்படி தான் வேலை செய்யும். அதாவது ராகு கேதுவிடம் மாட்டியவர்களை தடை என்ற ஒன்று தான் அவர்களை போட்டு வதைக்கும் ஒன்றாக இருக்கும். ஒரு சரியான முடிவு எடுக்கும் திறனை கூட ராகு கேது கொடுப்பதில்லை.

ராகு கேதுவிற்க்கு என்னிடம் வந்து தான் பரிகாரம் செய்யவேண்டும் என்பதில்லை நீங்களே வெளியில் சென்று எங்கு வேண்டுமானாலும் செய்துக்கொள்ளுங்கள். செய்யாமல் விட்டுவிட்டால் ஒரு விதத்திலும் உருப்படாமல் சென்றுவிடுவீர்கள்.

ராகு கேதுவின் பலனை முழுமையாக பெறுவதற்க்கும் இப்படிப்பட்ட பரிகார பூஜைகளில் கலந்துக்கொள்ளலாம். ஒரு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே இப்படி செய்வதால் அடுத்த வாய்ப்பு வருவதற்க்கு நீண்டநாள்கள் ஆகிவிடும். உடனே விருப்பம் இருப்பவர்கள் கட்டணத்தை செலுத்தி ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: