Followers

Friday, December 2, 2016

இராகு கேது பரிகாரம் பகுதி 4


ணக்கம்!
          இராகு குடும்ப ஸ்தானத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்த்து வருகிறோம். ராகு இரண்டாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது அதனை ராகு கேது தோஷம் இருக்கின்ற ஜாதகம் என்ற சொல்லிவிடுவார்கள். அனைவருக்கும் இந்த தோஷம் இருப்பதில்லை என்பது தான் உண்மை. சோதிடத்தில் உள்ள விதியை அப்பிளை செய்யும்பொழுது இது தோஷம் ஆக கணக்கீடு செய்யப்படுகிறது.

இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு திருமணம் செய்யும்பொழுது அவர்களை தனிக்குடித்தனம் போக பெரியோர்களே கட்டாயப்படுத்துகிறார்கள். புது தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளவே ஆண்டுகள் செல்லும். அவசர யுகத்தில் அவசரமாக தனிக்குடிதனம் செல்ல சொல்லுவதால் அவர்களும் சென்றுவிடுகிறார்கள்.

தனிக்குடித்தனம் செல்லும் இவர்களிடம் ராகு கேது விளையாட ஆரம்பித்துவிடும். இருவருக்குள்ளும் கடுமையான சண்டை சச்சரவுகளை கிளப்பிவிட்டு அவர்களை சண்டைபோட வைத்துவித்துவிடுகிறது. 

சண்டை முற்றி இருவரும் தன் வீட்டில் உள்ள நபர்களிடம் எங்களை பிரித்து வையுங்கள் என்று சென்றுவிடுகிறார்கள். பெரியோர்களும் இவர்களை பிரித்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். உண்மையில் இது எல்லாம் நடக்கிறது.

குடும்ப பாரம்பரித்தை திருமண ஆன புது தம்பதிகளுக்கு எடுத்து சொல்லவேண்டும். குடும்ப பாரம்பரியத்தை சொல்லும்பொழுது புதியவர்களும் அதனை கேட்டு இந்த குடும்பத்திற்க்காக நாம் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பார்கள். பாரம்பரியம் இல்லை என்றால் பிரிக்க தான் நினைப்பார்கள்.

நாம சொல்லவேண்டியவைக்கு வருவோம். இரண்டில் ராகு கேது இருந்தால் பயப்படும் அளவுக்கு இல்லை என்றாலும் வருடத்திற்க்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யவிட்டால் இதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: