Followers

Wednesday, December 28, 2016

நண்பர்களுக்காக


ணக்கம்!
          இந்த ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். புதிய ஆண்டு தொடக்க கொண்டாட்டம் என்பது நிறைய இருக்கும். அதனை எல்லாம் மிகுந்த எச்சரிக்கையோடு கொண்டாடுங்கள் ஏன் என்றால் எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தை தான் தரும் என்பதால் சொல்லுகிறேன்.

இந்த பதிவை இதில் எழுதுவது கூட நம்ம தளத்தில் அதிகம் இளைஞர்கள் இருப்பதால் இந்த தகவலை சொல்லுகிறேன். புதிய ஆண்டுக்கு என்று கொண்டாட்டத்தோடு வெளியில் சென்று வரலாம் என்று நினைப்பவர்களும் இருப்பார்கள் அதனை கூட தவிர்த்து விடுவது நல்லது. 

வண்டி வாகனங்களில் செல்லும்பொழுது அதிக கவனம் எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் ஒழுங்காக சென்றாலும் கூட எதிரில் வருபவர்கள் எப்படி என்பது தெரியாது என்பதால் வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம்.

புதிய பழக்கம் ஒன்று இருக்கின்றது. இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது. இதற்க்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை இதனை ஏன் செய்யவேண்டும். இரவு நேரத்தில் கும்பிடுவதற்க்கு என்று நம்மிடம் நிறைய பண்டிகை இருக்கின்றது.

கொண்டாட்டங்களை வீட்டில் வைத்துக்கொள்வது நல்லது. பாதுகாப்பாக இருந்துக்கொள்ளுங்கள். தேவையற்ற வேலையில் எல்லாம் ஈடுபடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: