Followers

Thursday, December 22, 2016

குரு


வணக்கம்!
          ஒருவருக்கு குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் அவர்க்கு எப்படிப்பட்ட தீமை தரும் கிரகங்களின் தீயபலனை குறைத்துவிடும். ஒரு சிலருக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டமசனி அல்லது தீமை தரும் தசா வரும்பொழுது அவர்களுக்கு குரு கிரகம் சாதகமான ஒரு பலனை தரும் நிலையில் இருந்தால் தீமையான பலனை கொடுக்காது.

குரு கிரகத்திற்க்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல சக்தி இருக்கின்றது. குரு கிரகம் சரியில்லை என்றால் நல்ல சக்தி குறைந்து தீமையான கிரகங்களின் ஆட்டம் அதிகமாக இருக்கும். நமக்கும் நல்ல பலனை கொடுக்காது.

குரு கிரகத்தின் சக்தியை அதிப்படுத்த நாம் நிறைய வழிகளை சொல்லிருந்தாலும் அதில் குரு போன்ற ஒருவரை நம்மோடு வைத்துக்கொண்டால் வாழ்வில் எப்படிபட்ட சூழ்நிலையிலும் நம்மை அவர் காப்பாற்றிவிடுவார்.

குரு கிரகம் சரியில்லை எனும்பொழுது ஒரு நல்ல குருவும் கிடைக்கமாட்டார் என்று நாம் சொல்லுவது உண்மை தான். எப்படி இருந்தாலும் நாம் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தால் நாம் செல்லும் திசைக்கு இவர்களும் வழிவகுப்பார்கள்.

குரு சரியில்லை என்றாலும் நிறைய நல்ல குரு எழுதிய நிறைய புத்தகங்களை வாங்கி படித்து அதன் வழியில் நாம் நடக்க துவங்கலாம். எதுவும் முடியவில்லை என்றால் குரு தரும் பொறுமை இருந்தால் பாேதும் அனைத்தையும் வென்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: