Followers

Friday, December 2, 2016

சுக்கிர தசா

ணக்கம்!
          சுக்கிரதசா நடக்கும் பெரும்பான்மையான நபருக்கு அதிக நோயையும் கொடுக்கிறது என்பது உண்மையான ஒரு விசயம். நாற்பது வயதிற்க்கு மேல் நோய் வருவது இயற்கையாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இளைமையிலேயே நோய் வருவது கஷ்டமாக இருக்கின்றது.

சுக்கிரதசா ஒருவருக்கு நோயை தருகிறது என்பது சுக்கிரன் தசா நடப்பவர்களுக்கு இது தெரியும். சுக்கிரதசாவில் சுக்கிரன் ஆறுக்குடையவனின் பார்வை அல்லது சம்பந்தப்படும்பொழுது ஏதாவது ஒரு நோயை தரும் என்பது பொதுவிதி. சுக்கிரன் நீசம் பெற்று தசா நடந்தாலும் நோயை தரும்.

சுக்கிரன் என்றாலே நம்ம ஆளுங்க உடனே சர்க்கரை வியாதி என்று சொல்லிவிடுவார்கள். சர்க்கரை வியாதி மட்டும் கிடையாது பல வியாதிகளையும் தான் சுக்கிரன் கொடுக்கிறது. சுக்கிரன் நீசம் பெறும் காலத்தில் கண் சம்பந்தப்பட்ட நோயை கூட கொடுக்கும். 

உடலில் கணையம் பிரச்சினை என்றால் பல நோயைகளை உருவாக்கிவிடும். நாம் தீயகிரகத்தை பற்றி தான் பயப்படுவோம் ஆனால் சுக்கிரன் போன்ற கிரகங்களும் அதிக தீமையை தரும் என்பது சுக்கிரதசாவில் அடிப்பட்டவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தது உடலில் ஒரு கட்டி வந்தது அதனை ஆப்ரேஷன் செய்து நீக்க சென்றவர்கள் அதனாலே இறந்ததும் நடந்து இருக்கிறது. 

சுக்கிர தசா நடந்து அவர்களுக்கு நோயை தருகின்றது என்றால் சுக்கிரனுக்கு உரிய பரிகாரத்தை செய்யுங்கள். அவர்களின் ஜாதகத்தை என்னிடம் காண்பித்து அதற்குரிய பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: