Followers

Thursday, March 22, 2018

குலதெய்வம்


வணக்கம்!
          ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தைப்பற்றி பார்த்தோம். ஒருவரின் பூர்வபுண்ணியம் சரியில்லை என்றாலும் அவர்களின் குலதெய்வத்தை தொடர்ந்து வணங்கி வந்தால் இதனை சரிசெய்யமுடியும். 

குலதெய்வத்தை தொடர்ந்து வணங்குவதற்க்கு தடைகள் வரும். பூர்வபுண்ணியம் சரியில்லை எனும்பொழுது அவர்களின் குலதெய்வம் மட்டும் அவ்வளவு எளிதில் இடம்கொடுத்துவிடாது. குலதெய்வத்தை கும்பிடும்பொழுது அந்த கோவிலுக்கு தொடர்புடையவர்களை அழைத்துக்கொண்டு சென்று வந்தால் உங்களுக்கு நல்லது.

உங்களுக்கு வருகின்ற தடைகளை எல்லாம் உங்களின் குலதெய்வத்தை ஏற்கனவே வணங்கி வந்தவர்கள் உங்களோடு வரும்பொழுது அந்த தடைகள் வராது என்பதற்க்காக அவர்களை அழைத்துக்கொண்டு செல்லலாம்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு உங்களின் குருவிடம் சொல்லிவிட்டு அல்லது குருவை அழைத்துக்கொண்டு சென்று அந்த குலதெய்வத்திற்க்கு அபிஷேகம் செய்தால் உங்களின் குலதெய்வத்தின் அருளை நீங்கள் பெறலாம்.

குலதெய்வத்தின் பார்வை உங்களின் மேல் பட ஆரம்பித்துவிட்டால் அதன்பிறகு பூர்வபுண்ணியம் சரியாகிவிடும். உங்களுக்கும் நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். பூர்வபுண்ணியம் சரி செய்வதற்க்கு இது ஒரு வழி அதன்பிறகு தொடர்ச்சியாக பச்சைப்பரப்புதல் செய்து வந்தால் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் அது அருளை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

radha said...

kanavar iranthu oru pen kulanthaiyudan amma veetukkae vanthu vittal. pugantha vEEtil yarum vanthu povathillai. kula theivam therinthum sella mudiyavillai. appa kula theivathaie vanagalama? guruvai mattum vanaginal pothumaa? alathu vittel kula theivam vanagalamma?