Followers

Wednesday, March 21, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          வக்கிரசக்தி அம்மன் எங்கு எல்லாம் உள்ளது என்று சொல்லுங்கள் என்று நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார். வக்கிரசக்தி அம்மன் என்பது அவர் அவர்களின் பக்கத்தில் எந்த கோவில் நடைசாத்தாமல் இருக்கின்றார்களோ அதாவது பகலில் கூட நடை சாத்த மாட்டார்கள். ஒருவேளை நடைசாத்தும் அம்மனாக இருந்தாலும் அந்த கோவில் கிரகணம் காலங்களில் நடைதிறந்து இருக்கும்.

நான் வக்கிரகாளி அம்மனை வணங்குவேன். அவர்களில் அருகில் மேலே சொன்னமாதிரி இருந்தால் அதனை வணங்கி வந்தால் உங்களுக்கு போதுமானது. அதனை விட கொஞ்சம் ஆன்மீகவாதியாக இருந்தால் இதனை எளிதில் கண்டுபிடிப்பார்கள்.

வக்கிரசக்தி அம்மன் என்பது அந்த கோவிலுக்கு அருகில் ஒரு சுடுகாடு இருக்கும். சுடுகாட்டில் இருந்து அந்த கோவிலுக்கு சக்தி கிடைக்கும். அந்த தெய்வம் கண்டிப்பாக வக்கிரசக்தியுடைய அம்மனாக இருக்கும்.

ஒரு சில கோவில்களில் மதியம் ஒரு மணிக்கு சாமி கும்பிடுவார்கள். ஒரு சில கோவில்களில் இரவு நேரங்களில் சாமி கும்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். இப்படிப்பட்ட கோவில்கள் எல்லாம் வக்கிரசக்தி உடைய அம்மனாக இருக்கும்.

மேலே சொன்ன விசயத்தை வைத்து நீங்களே வக்கிரசக்தியுடைய அம்மனை பார்த்து வணங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு அருகில் இப்படிப்பட்ட தெய்வம் இருக்கும். 

நல்ல வருமானம் வருகின்றது என்று ஒரு சில பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் எல்லாம் பகலில் நீண்ட நேரம் மற்றும் இரவிலும் நீண்டநேரம் தற்பொழுது திறந்து வைத்திருக்கின்றார்கள் அதனை எல்லாம் நீங்கள் நம்பவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

radha said...

engal oor arukae oru amman kovil irukkirathu. pagalil natai saarthum vazhakkamillai. Anaal iravil kumbiduvathu illai. athai vakkira ammanaga eduthukkollalama?