Followers

Tuesday, July 2, 2013

தசா பகுதி 3


வணக்கம் நண்பர்களே !
                    தசாபகுதியை பற்றி பார்த்து நீண்டநாட்களாக ஆகிவிட்டது. இனிமேல் தொடர்ந்து பார்க்கலாம். 

ஒருவருக்கு ஒரு தசா ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அது எவ்வாறு பலனை கொடுக்கிறது என்று பார்ப்போம். ஒருவருக்கு ஒரு தசா தொடங்கும் பொழுது சுயபுத்தி ஆரம்பம் ஆகும். ஒவ்வொருவரும் என்ன சொல்லுவார்கள் என்றால் சுயபுத்தி கெடுதலை தரவேண்டும் என்று சொல்லுவார்கள். சுயபுத்தி கெடுதலை தந்தால் பிறகு வரும் புத்தி நல்லது செய்யும் என்று காரணத்தால் அவ்வாறு சொல்லுவார்கள்.

சுயபுத்தி நல்லதை தருமா கெடுதலை தருமா என்று எப்படி கண்டுபிடிப்பது?

சுயபுத்தி கெடுதலை தான் தரவேண்டும் என்ற சட்டதிட்டங்கள் எல்லாம் நம் கையில் இல்லை. நாம் நினைப்பது போல் நடைபெறுவதும் இல்லை.

அனுபத்தில் கண்டதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். லக்கினத்திற்க்கு மூன்றாவது இடம் ஆறாவது இடம் எட்டாவது இடம் மற்றும் பனிரெண்டாவது இடத்தில் சுபகிரங்கள் அமர்ந்தால் சுயபுத்தி நல்லதை தரும். பிறகு வரும் புத்திகள் எல்லாம் பிரச்சினை கொடுக்கிறது.

கெடுதலை தரும் கிரகங்கள் மூன்றாவது வீடு,ஆறாவது வீடு, எட்டாவது வீடு மற்றும் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்தால் சுயபுத்தி கெடுதலை தரும். பிறகு வரும் புத்திகள் எல்லாம் நல்லதை செய்கிறது.

கெடுதலை தரும் கிரகங்கள் மறைவிடங்களில் இல்லாமல் அமர்ந்து தசா நடைபெற்றால் சுயபுத்தி நல்லது செய்யும் பிறகு வரும் புத்திகள் பிரச்சினையை கொடுத்துவிடும்.

சுபகிரகங்கள் வக்கிரமாகி மறைவிடங்களில் அமர்ந்தால் சுயபுத்தி கெடுதலை தரும். பிறகு வரும் புத்திகள் நல்லதை செய்கிறது.உங்களுக்கு மேலே சொன்னது அனைத்தும் அனுபவத்தில் பார்த்ததை சொல்லியுள்ளேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Arul said...

Dear Rajesh

I have saturn is placed in KADAGAM (9th Place) for Viruchiga lagna.
and it is suya saram (pooshma 3il). So idhu Suya bhuthiyil nalladhu seydhu pinnal kedudhal palan tharuma?

please reply Sir.

Thanks and Regards
Arul Kumar Rajaraman

rajeshsubbu said...

வணக்கம் சார் நலமா? நான் சொன்னது அனுபவத்தில் ஒரு சிலருக்கு நடந்திருக்கிறது. அனைவருக்கும் இது பொருந்தாது. சனி சொந்த நட்சத்திரத்தில் செல்லுகிறார் அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. மூன்றுக்கும் நான்கும் உடையவன் பாக்கியத்தில் ஏறியிருப்பதால் மூன்றையும் கலந்து தான் சுயபுத்தியில் பலனை தரும். உங்களுக்கு சுயபுத்தி கெடுதலை அதிகம் தருவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.
நன்றி

rajeshsubbu said...
This comment has been removed by the author.