Followers

Sunday, July 21, 2013

தசா நாதன் பகுதி 5


வணக்கம் நண்பர்களே!
                     ஒருவருக்கு எந்த தசா நல்ல பலனை தரும் என்று கேட்டுருந்தேன். அதற்கு பல நண்பர்கள் பதில் அளித்து இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். 

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் முதலாவதாக லக்னம் நன்றாக இருந்து அந்த தசா நடைபெற்றால் நன்றாக இருக்கும். ஆத்மாகாரனாகிய சூரியன் நன்றாக இருந்து தசா நடைபெற்றால் அந்த தசா நன்றாக இருக்கும். அதைப்போல் மனதுக்காரனாகிய சந்திரன் தசா நடைபெற்றால் அந்த ஜாதகனுக்கு நன்றாக இருக்கும்.

ஒருவருக்கு முதல் தசாவாக எந்த தசை வந்தால் ஜாதகனுக்கு நல்ல பலனை கொடுக்கும் என்றால் கேந்திரத்தில் அமர்ந்து நடைபெறும் கிரகங்கள் நல்ல பலனை தரும். ஆரம்ப வயதில் இந்த தசா நடைபெறும் பொழுது மிகுந்த செல்வாக்கோடு அவர்கள் வாழமுடியும். நல்ல பலனை தரும்.

கேந்திரத்தில் அமர்ந்து நடைபெறும் கிரகங்களின் தசா ஆரம்பவயதில் வரவேண்டும். இது முதல் தரமான பலனை தரகூடியது. சரி கேந்திரத்தில் கிரகங்கள் இல்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படிபட்ட ஜாதகருக்கு அடுத்தது எந்த கிரகத்தின் தசா நல்ல பலனை தரும் என்று நாம் பார்ப்போம்.


பணபரம் என்று சொல்லக்கூடிய 2, 5, 8, 11 ஆம் வீடுகளின் தசா அந்த ஜாதகருக்கு நல்ல பலனை தரும். ஆரம்பவயதில் கேந்திரத்தில் கிரகங்கள் இல்லாமல் பணபரத்தில் கிரகங்கள் இருந்து அந்த தசா நடைபெறும் பொழுது பலனை தரும். இதில் பார்த்தீர்கள் என்றால் பணபரத்தில் எட்டாவது வீடும் வருகிறது. நாம் இதுவரை எட்டாவது வீட்டு தசா நடைபெற்றால் மோசம் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். அந்த ஜாதகருக்கு கெட்டது நடைபெறும் என்று சொன்னால் அது நடைபெறாது. 

நமது முன்ஜென்ம புண்ணியப்படி நமது அப்பாவின் அப்பா அதற்கு முன்னோர் எதுவும் உயில் எழுதி வைத்திருந்தால் அந்த சொத்து கிடைத்துவிடும். பெரிய நகரத்தில் சொத்து வைத்து இருந்திருக்கலாம். அதனைப்பற்றி தெரியாமல் கூட இருக்கலாம். இந்த தசா நடைபெறும் காலத்தில் அந்த சொத்து உங்களுக்கு வந்திருக்கலாம். அப்பொழுது எட்டாவது வீட்டு தசா அந்த ஜாதகருக்கு நல்ல பலனை தானே கொடுத்திருக்கிறது. 

உங்களுக்கு இது புரியும் என்று நினைக்கிறேன். அதாவது கேந்திரத்தில் கிரகங்கள் இல்லாமல் பணபரத்தில் கிரகங்கள் இருந்து அந்த ஜாதகருக்கு ஆரம்ப வயதில் அந்த தசா நடைபெறும் பொழுது நல்ல பலனை கொடுக்கிறது. 

சரி அடுத்ததாக கேந்திரத்தில் அல்லது பணபரத்தில் இல்லாமல் தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அவருக்கு எப்பொழுது நல்லது நடைபெறுவதற்க்கு தசா வரும் என்று பார்க்கவேண்டும். கேந்திரத்திலும் பணபரத்திலும் கிரகங்கள் இல்லை என்றால் ஆபோக்லிமாகிய என்று சொல்லக்கூடிய இடமாகிய 3 , 6, 9, 12  இடங்களில் அமர்நது நடைபெறும் தசாவில் எந்த வயதிலும் நல்ல பலனை தரும் என்று சொல்லலாம். 

இது எப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்க தோன்றும். நான் தொழில்முறை சோதிடர் என்பதால் நான் பார்த்த ஜாதகத்தில் இப்படி பலனை கொடுத்திருக்கிறது.  அதனை வைத்து உங்களுக்கு சொன்னேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: