Followers

Monday, July 15, 2013

ராகு தசா வில்லங்கம்


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஐ டி துறையில் வேலை செய்யலாம் அல்லது ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பவர்களும் ஐ டி துறையில் வேலை செய்யும் வாய்ப்பு உருவாகும். ராகு தசா நடைபெறும் பொழுது கூட ஆன்மீகத்திற்க்கு இழுத்துச்செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் எந்தளவுக்கு ஆன்மீகத்தின் பக்கம் செல்லுகிறீர்களோ அந்தளவுக்கு அங்கும் உங்களுக்கு பிரச்சினை எழுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படி சொல்லுகிறேன் என்றால் ஒரு வேலை சரியான இடத்திற்க்கு நீங்கள் செல்லகூடும். ஒரு சிலருக்கு மாந்தீரிகத்தின் மீது ஈர்ப்பு வந்துவிடும். இப்பொழுது பல தளங்களில் மாந்தீரிகம் செய்பவர்கள் தான் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்ன ஒரு வித்தியாசம் என்றால் நாங்கள் சித்தர்கள் என்று சொல்லிக்கொண்டு இதனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சாமியார்கள் என்று முன்பு வந்துக்கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது சித்தர்களாகிவிட்டார்கள் ஆனால் செய்வது எல்லாம் ஒரே வேலை தான் அது மாந்தீரிக வேலை மட்டுமே. நீங்களே படித்திருக்கலாம். அஞ்சனம் செய்வது எப்படி? இது என்ன இது தான் மை வேலை. நான் கூட இதனைப்பற்றி பழைய பதிவுகளில் சொல்லியுள்ளேன். மை எல்லாம் நான் பயன்படுத்தியதே கிடையாது. 

மை என்று வரும்பொழுது அங்கு மாந்தீரீகம் என்று வந்துவிடும். மை இல்லாமல் மாந்தீரீகம் கிடையாது. இவர்கள் எல்லாம் சொல்லுவார்கள் எல்லாம் மூலிகை என்று சொல்லுவார்கள். மூலிகையை யார் பார்த்தது. இடையில் பலவிதம் சேர்க்க வாய்ப்பு இருப்பதால் இதனை நாடி நீங்கள் செல்லவேண்டாம்.

ஆன்மீக வாழ்க்கையும் ஒரு அளவோடு செயல்படுத்த வேண்டும். உங்களின் மனதை வைத்துக்கொண்டு அதற்கு பயிற்சி கொடுங்கள் . பிற புற பொருள்களின் மீது நீங்கள் நாட வேண்டியதில்லை. நீங்கள் அனைவரும் ஒரு நல்ல வேலையில் இருப்பீர்கள். எங்கையாவது போய் மை வாங்குகிறேன் என்று மாட்டிக்கொள்ளவேண்டாம். ராகு தசாவி்ன் ஈர்ப்பு உங்களை அப்படி அதன் மீது ஈர்க்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

pratheesh said...

கடகலக்கினத்துக்கு செவ்வாய் பார்வையுல்ல ரிசப ராகு திசையில் நன்மை தருமா ஐயா