Followers

Sunday, July 21, 2013

குருவே அம்மன்


வணக்கம் நண்பர்களே !
                     இப்பொழுது பல நண்பர்கள் காயத்ரி மந்திர பயிற்சி செய்துக்கொண்டு வருகிறார்கள். இந்த காயத்ரி மந்திர பயிற்சி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவர் சொல்லுதை கேட்டு நாம் செய்தால் அப்படி என்ன நடந்துவிடபோகிறது என்று நினைக்கலாம்.

காயத்ரி மந்திரங்கள் பல ஆண்டுகளாக இருக்கின்ற ஒன்று தான் நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். இந்த மந்திரங்களை நீங்கள் உரு ஏற்றினாலும் அந்த உரு ஏற்றுவதற்க்கு அதிகமான சக்தியை கொடுத்து உதவ செய்வது நமது அம்மன். என்னிடம் பல பேர் பேசி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் குறைந்தது நாற்பது வருடங்கள் எல்லாம் காயத்ரி மந்திர உபசானை செய்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு முன்னேற்றமும் நடைபெறவில்லை. என்னிடம் வந்து இந்த பயிற்சியை செய்தவுடன் ஒரு சில நாட்களிலேயே சிறப்பான அனுபத்தை பெற்று இருக்கிறார்கள்.

நான் எதுவும் இதில் செய்யவில்லை. எல்லாம் நமது அம்மனின் அருள் அவர்களுக்கு கிடைக்கிறது அவர்கள் செய்யும் தெய்வங்களின் உரு உடனே பலனை தருகிறது.காயத்ரி மந்திரங்கள் என்பது உண்மை தான் ஆனால் அதனை சொல்லிக்கொடுக்கவும் ஒரு குரு தேவை. அந்த குருவிடம் நல்ல சக்தி இருந்தால் மட்டுமே அந்த மந்திரமும் செயல்படமுடியும். நமது பிளாக் வழியாக செய்யும் நண்பர்களுக்கு நமது அம்மனே குருவாக இருந்து கற்பிக்கிறாள் என்பது மட்டுமே உண்மையான ஒன்று. 

நீங்கள் இதுவரை மந்திரங்கள் பயிற்சி பெற்றாலும் இந்த பயிற்சியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பல வருடங்கள் ஒரே மந்திரத்தை உரு ஏற்றி செய்துக்கொண்டு இருக்கலாம். அதனால் ஒன்றும் பயன் ஏற்படவில்லை என்றால் அந்த மந்திரத்தை எடுத்துக்கொண்டு என்னிடம் தொடர்புக்கொண்ட பிறகு செய்யுங்கள். உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.

ஒரு சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாம் இந்த மாதிரி பயிற்சி எல்லாம் செய்தால் ஆன்மீகவாதியாக மாறி சாமியாராகிவிடுவோம் நமது இல்லறவாழ்க்கை பாதிக்கப்படசெய்யும் என்றும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்று நீங்கள் நீங்களாவே இருப்பீர்கள் என்ன அதிக சந்தோஷத்தோடு மற்றும் மனஅமைதியோடும் இருப்பீர்கள். பயம்கொள்ளாமல் உடனே பயிற்சி எடுக்க பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: