Followers

Friday, July 19, 2013

ஆடி வெள்ளி


வணக்கம் நண்பர்களே!
                    இன்று ஆடி வெள்ளி. அம்மனுக்கு உகந்த நாள். அம்மனை வழிபட உகந்தநாள் .உங்களின் குலதெய்வத்தை வணங்கும் நாளாக இதனை எடுத்துக்கொண்டு குலதெய்வ பிராத்தணையை செய்யுங்கள்.

நீங்கள் வெளியூரில் இருந்தால் உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மனை சென்று வணங்கிவாருங்கள். வெள்ளிக்கிழமையை பொருத்தவரை  அம்மன் வழிபாடு செய்யவார்கள். ஆடி மாதம் என்பது அம்மனின் மாதம் என்பதால் விஷேசமான வழிபாடுகள் மற்றும் ஹோமங்கள் நடைபெறும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது அதிக நேரம் இந்த மாதம் அம்மனின் கோவில்களை தரிசிப்பது நல்லது.

இல்லறவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அம்மன் அனைத்தையும் தருவாள். இல்லறவாழ்க்கையில் இருப்பவர்கள் அம்மனை தவிர வேறு தெய்வத்தை வணங்க வேண்டாம் என்று கூட நான் சொல்லுவது உண்டு அதற்கு காரணம் அம்மன் மட்டுமே இல்லறவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு துணை செய்யும் என்பதால் அவ்வாறு சொல்லுவது உண்டு. ஒரு தாய் தன் குழந்தைகளை உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவாள் அதேபோல் அம்மன் தன் குழந்தைகளை காப்பாற்றுவாள்.

காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் பொன்னான மாதம். நீங்கள் உங்களின் கவனத்தை முழுமையாக செலுத்தினால் எளிதில் வெற்றி பெறமுடியும். நல்ல மந்திரசித்தி கிடைக்கும். வாய்ப்பை தவறவிடவேண்டாம்.

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு இந்த மாதம் மிக உகந்த மாதம். மேல்மலையனூரில் இந்த மாதம் முழுவதும் விசேஷமாக திருவிழா நடைபெறும். அம்மனின் அதிகமான சக்தியை நீங்கள் வழிபடவேண்டும் என்றால் இந்த கோவிலுக்கு சென்று வணங்கிவாருங்கள். நமது ஊரில் இருக்கும் அம்மனுக்கும் இந்த மாதம் சிறப்பான பூஜை செய்யப்படும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: