Followers

Friday, July 5, 2013

நல்ல நேரம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது பிளாக்கின் வழியாக காயத்ரி மந்திர பயிற்சியினை பல நண்பர்கள் செய்துக்கொண்டு இருக்கின்றனர். புதியதாக வரும் நண்பர்கள் இதனைப்பற்றி கேட்டனர். அவர்களுக்கு வளர்பிறை வரும்வரை பொறுமையாக இருங்கள் என்று சொல்லிருந்தேன். அவர்களுக்கான நல்ல நேரம் வந்துள்ளது.

எந்த செயலும் நல்ல நேரத்தில் வளர்பிறையில் ஆரம்பிக்கவேண்டும். 10-07-2013 அன்று காலையில் ஆரம்பிக்கவேண்டும். நீங்கள் இதனை செய்வதற்க்கு முன்பு என்னை தொடர்புக்கொண்ட பிறகு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சிலர் ஆர்வகோளாறு காரணமாக என்னை தொடர்புக்கொள்ளமால் தொடங்கிவிடுகிறார்கள். பிறகு பிரச்சினை என்று வந்ததும் என்னை தொடர்புக்கொண்டு கேட்கிறார்கள். என்னை தொடர்புக்கொண்ட பிறகு செய்வது நல்லது.

நீங்கள் எடுக்கபோகும் சக்தியினை பார்த்து அதற்கு தகுந்தார்போல் நான் உங்களுக்கு வேண்டிய தகவலை தந்துவிடுவேன். அப்பொழுது உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் செய்துக்கொண்டு இருக்கலாம். என்னை தொடர்புக்கொண்டால் உங்களிடம் எதுவும் கேட்கபடலாம் என்ற எண்ணம் இருக்கலாம். எதுவும் கேட்கமாட்டேன்.தாராளமாக தொடர்புக்கொள்ளுங்கள்.

நமது பிளாக்கிற்க்கு வரும் பல நண்பர்கள் இதனைப்படிப்பதோடு சரி இது எல்லாம் செய்ய வேண்டாம் என்று விட்டுவிடுகிறார்கள். இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம். நீங்களும் ஒரு ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு இது ஒரு நல்ல நேரம் அதனால் வரும் நல்ல நாளை பயன்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

மந்திரங்களை என்னிடம் கேட்கவேண்டாம். உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் மந்திரத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான வழிமுறைகளை நான் சொல்லிதருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: