Followers

Tuesday, July 23, 2013

சனியின் வக்கிர முடிவு


வணக்கம் நண்பர்களே!
                    நடந்து முடிந்தவுடன் அதனைப்பற்றி சோதிடத்தில் சொல்லக்கூடாது ஆனால் நடப்பதற்க்கு முன் பல பேர் இதனைப்பற்றி சொன்னாலும் யாரும் அதனைப்பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். நமக்கு தெரிந்ததை சொல்லிவிடுகிறேன்.
சரி விசயத்தை பார்க்கலாம். 

சினிமாவில் இருப்பவர்களுக்கு இது போதா காலம் என்று சொல்லவேண்டும். ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மரணத்தை தழுவிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் தற்பொழுது சனி பகவான் துலாம் ராசியில் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். கூடவே பங்காளி ராகுவும் சேர்ந்து அமர்ந்துள்ளது. கலைதுறையில் இருப்பவர்களுக்கு குறிக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து இருப்பதால் கலைதுறையினர் அதிகம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள். 

சுக்கிரன் வண்டி வாகனங்களுக்கும் காரகம் வகிப்பதால் வாகனங்கள் அதிகமாக விபத்துக்குள்ளாகும். வண்டியில் போகும் பொழுது எச்சரிக்கையுடன் இருங்கள். வெளியுலகத்தை சோதிடர்களாக இருப்பவர்கள் உற்று நோக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே உலகத்தில் என்ன நடக்கிறது எதனால் நடக்கிறது என்பதை அறியமுடியும்.

சினிமாவில் இருப்பவர்கள் சனிக்கும் ராகுக்கும் பரிகாரம் செய்வது நலம் பயக்கும். மொத்தமாக சேர்நது பரிகாரம் செய்ய வேண்டியது. சினிமாவில் சங்கம் இருக்கிறது அல்லவா  அவர்கள் செய்யலாம். நமது பிளாக்கிற்க்கு சினிமாவில் இருப்பவர்கள் வந்து படித்து செல்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். நீங்களே சொல்லிவிடுங்கள்.

இதனை ஏன் இப்பொழுது நடந்து முடிந்தவுடன் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கலாம். சனிபெயர்ச்சி நடக்கும்பொழுதே அனைத்து புத்தகங்களிலும் கலைதுறையினர்க்கு எச்சரிக்கை என்று எழுதி இருப்பார்கள். அப்பொழுது அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். இப்பொழுது தான் சனிக்கிரகம் வக்கிரம் முடிந்து வந்து இருக்கிறது இனி ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: