Followers

Tuesday, July 30, 2013

அன்னையின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                     பிறரின் வலியில் நாம் சந்தோஷப்பட்டால் அவன் மனிதனே அல்ல. அப்படிப்பட்ட சந்தோஷம் தேவையில்லை என்று நினைப்பவன் தான் ஆனால் நம்மிடம் ஒன்றுமே இல்லாத நேரத்தில் நம்மை தாக்குவது என்பது நம்மை அழிப்பதற்க்கு சமம் என்று அர்த்தம். அந்த தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது அவசியமான ஒன்றாகதான் இருக்கும்.

அன்னையின் அருள் பகுதியில் ஒரு கோடிஸ்வரரைப்பற்றி சொன்னேன் அல்லவா. இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னை வந்து சந்தித்தார். உங்களிடம் இதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன். வேலை காரணமாக சொல்லவில்லை. அவரிடம் இனிமேல் ஒவ்வொரு மனிதனும் தன்னைபோல் உள்ளவன் தான் மனிதனை முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தது எல்லாம் உங்களை தேடிவரும் என்று சொன்னேன். 

ஒவ்வொரு மனிதனும் அற்புதமானவர்கள் அதனை புரிந்துக்கொள்ளவேண்டும். கடவுள் மனிதனை படைக்கும்பொழுது ஒவ்வொரு தனித்தன்மையோடு படைக்கிறார். நாம் என்ன செய்கிறோம் அந்த தனித்தன்மையை பயன்படுத்திக்கொண்டு தான் மட்டும் உயர்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் பணத்தை பார்த்தவுடன் ஆட ஆரம்பித்துவிடுகிறோம். அந்த ஆட்டத்தை முடித்துவைக்க ஆண்டவன் சாட்டையை எடுக்கிறான். 

தன்னால் ஒரு கோடி சம்பாதிக்கமுடியும் எனும்பொழுது பிறரும் அந்த பணத்தை சம்பாதிக்கமுடியும் என்று எண்ணவேண்டும்.அனைவரும் மனிதர்கள் என்று எண்ணம் இருந்தால் மட்டுமே உங்களுக்குள் ஆன்மீகம் வரும்.அடுத்தவர்களை என்று உதாசீனப்படுத்தினர்களோ அன்றே உங்களிடம் ஆன்மீகம் வராமல் போய்விடும்.

அன்னையின் அருளை படிக்கும்பொழுது இது எல்லாம் நடைபெற்று இருக்குமா என்று சந்தேகம் வருவது இயற்கை ஆனால் உண்மையில் நடைபெற்றது.தன்னை நம்பியவனை என்றும் காப்பாற்றுவள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: