Followers

Monday, July 22, 2013

குலதெய்வ வழிபாடு


வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுது சென்னையில் இருக்கும் நமது சோதிடநண்பர்கள் எல்லாம் என்னை அவர்கள் வந்து சந்திப்பதற்க்கு பதில் அவர்களை நான் சென்று சந்திக்கிறேன். இதற்கு காரணம் ஒன்று நான் அவர்களின் வீட்டிற்க்கு செல்வதால் நமது அம்மனின் வழியாக அவர்களுக்கு நல்லது நடக்கும் மற்றோன்று அவர்களின் வீட்டை நான் பார்த்தால் அவர்களின் வீடுகளில் குலதெய்வத்தின் அருள் எப்படி இருக்கும் என்று பார்த்து அதற்கு தகுந்த ஏற்பாடு செய்யலாம் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வீட்டிற்க்கும் நான் செல்லுகிறேன்.

குலதெய்வத்தை பொருத்தவரை நான் பல பதிவுகளை எழுதியுள்ளேன். பங்காளிகளாக சேர்ந்து ஒரு தெய்வத்தை வணங்கிவரலாம். இப்படி பங்காளிகள் வணங்கினாலும் ஒருவருக்கு மட்டுமே அந்த குலதெய்வம் அனைத்தையும் வழங்கிக்கொண்டிருக்கும். பலர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த நிலை எதனால் ஏற்படுகிறது என்றால் குலதெய்வத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் மண் எடுத்து வந்து அதனை பூஜை செய்து அவர்களின் பக்கமாக இதனை திருப்பிவிடுவார்கள். இது இப்பொழுது இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் இது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பிறரை கஷ்டப்படுத்தி நாம் மட்டும் வாழவேண்டும் என்ற நினைப்பு ஒரு சில ஆண்டுகள் வரை நன்றாக இருக்கலாம். அதன் பிறகு அவர்களுக்கு பிரச்சினையை தரும். நான் செல்லும் வீடுகளுக்கு அவர்களும் வாழவேண்டும் அவர்களை சேர்ந்தவர்களும் வாழவேண்டும் அனைவருக்கும் பொதுவான சக்தியாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே செய்வது எனது இயல்பு.

குலதெய்வ வழிபாட்டை ஏன் நான் அதிகமாக சொல்லுவதற்க்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து அதனை பார்த்து உங்களுக்கு சொல்லுகிறேன். 

பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு துர்கை வழிபாடு விசேஷமாக இருந்தது. இன்று காலபைரவர் விசேஷமாக இருக்கிறார். இந்த வழிபாடு எல்லாம் ஒரு சிலரின் சுயநலத்திற்க்காக பரப்பும் ஒரு செயல்தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இந்த வழிபாடு எல்லாம் ஒரு சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும் ஆனால் என்றும் நிலைத்திருக்கும் ஒரே வழிபாடு குலதெய்வ வழிபாடு மட்டுமே. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: