Followers

Sunday, July 21, 2013

தொழில் செய்யும் நண்பர்களே


வணக்கம் நண்பர்களே!
                    வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கு என்று ஒரு பதிவை வெளியிட்ட நாளில் இருந்து பல நண்பர்கள் தொடர்ந்து தொடர்புக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் என்ன சொல்லுகிறார்கள் என்றால் என்னுடைய பணம் வராமல் நிலுவையில் இருக்கிறது அதனை வரவழைத்து தாருங்கள் என்றும் கேட்கிறார்கள். 

ஒருவரிடம் நீங்கள் பணம் கொடுத்தால் அந்த பணத்தை பெற்று தருவதற்க்கு என்னிடம் வழிகளில் இல்லை. அதனை நீங்கள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய குருநாதர் என்னிடம் சொல்லும்பொழுது இதனை மிகமுக்கியமாக சொல்லியுள்ளார். இந்த பணவேலைக்கு மட்டும் செல்லகூடாது என்று சொல்லியுள்ளார். நீங்கள் பணத்தை கொடுக்கும்பொழுது எந்த நிபந்தனையில் கொடுத்தீர்கள் என்று தெரியாது. அதனை நீங்கள் திரும்பி கேட்கும்பொழுது உண்மையில் அவரிடம் பணம் இருக்காது. 

இந்த பணத்தை பெற நீங்கள் இது போல் வழியை நாடினால் அது பாவமாக தான் இருக்கும். இநத வேலையை மட்டும் நான் செய்வதில்லை. இந்த வேலையை செய்தால் பணம் எனக்கு வரும் ஆனால் பணத்தோடு பாவமும் சேர்ந்து வரும். இந்த வேலை மட்டும் வேண்டாம்.

பல தொழில் நிறுவனங்கள் தன்னுடைய சரக்கை அனுப்பி அதற்கு பணம் வரவில்லை என்று கேட்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நீங்கள் அம்மனை தான் நாடவேண்டும். அம்மனிடம் பிராத்தனை செய்யலாம். அம்மன் பார்த்து உங்களுக்கு செய்து தரும்.

வியாபாரத்திற்க்கு என்று என்னிடம் இணைந்த அனைத்து நண்பர்களும் வாரத்திற்க்கு ஒரு முறையாவது என்னை தொடர்புக்கொள்வது நல்லது. நான் பிஸியாக இருப்பேன் என்று நீங்களாவே நினைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். நான் பிஸியாக இருந்தாலும் உடனேயே உங்களை தொடர்புக்கொண்டுவிடுவேன்.

இப்பொழுது பல கம்பெனிகள் நல்லநிலைக்கு கொண்டுவந்துள்ளேன். உங்களின் நடவடிக்கை எனக்கு திருப்திகரமாக இருந்தால் வெகுஎளிதில் உயரத்தை தொட்டுவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: