Followers

Monday, July 22, 2013

தசாநாதன் பகுதி 6


வணக்கம் நண்பர்களே!
                     பொதுவாக எந்த ஒரு தசா நடந்தாலும் ஒரு மனிதனுக்கு அந்த தசாநாதனின் குணம் வெளிப்படும் அதே நேரத்தில் அந்த மனிதனின் சுயகுணத்தையும் அறிந்து தசாப்பலனை சொன்னால் மட்டுமே சொல்லும் ஜாதக பலன் சரியாக அமையும். இதனை நான் பல ஜாதகங்களை பார்க்கும்பொழுது  தெரிந்தது.

ஒருவரின் சுயகுணம் என்பது மிகமுக்கியம். ஒருவருக்கு திருட்டு குணம் இருந்து அவருக்கு கெடுதல் தரும் தசா நடந்தால் அது தான் அவரின் வாழ்க்கையில் பொன்னான நேரமாக இருக்கும். இப்பொழுது அரசியல்வாதிகள் முக்கால்வாசி பேர் பொதுசொத்தை திருடுகிறார்கள். ஒரு அரசியல்வாதி உங்களி்டம் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஆறாவது வீட்டு தசா நடந்துக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நாம் பலன் சொல்லும்பொழுது உங்களுக்கு கஷ்டகாலம் இந்த காலத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லக்கூடாது.

அவரிடம் நீங்கள் தசாவின் சுயபுத்தி முடிந்துவிட்டால் இனி தான் உங்களுக்கு நல்ல காலம் வருகிறது இனி நீங்கள் கோடிஸ்வரர் ஆக போகிறீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் சொல்லுவது போலவே நடைபெறும். ஏன் என்றால் அரசியலில் கொள்ளை அடிப்பதற்க்கு ஏற்ற காலம் எது என்றால் இப்படிபட்ட தசா ஒருவருக்கு நடைபெற்றால் அவருக்கு பொன்னான வாய்ப்பு உருவாகும். இவர்கள் அடிக்கும் பணத்தை எவனாலும் கண்டுபிடிக்கமுடியாது. கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் கெடுதல் தசாவில் தான் சம்பாதிப்பார்கள். இவர்கள் அடிக்கும் பணத்தை கண்டுபிடிக்கவே முடியாதற்க்கு காரணம் இந்த மாதிரி தசாக்கள் செய்யும் வேலை.

எனது சோதிடவாடிக்கையாளர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இப்பொழுது எல்லாம் இந்த தேர்தலுக்கு செய்யும் செலவை எடுப்பது என்றால் முடியாத காரியம். ஏன் என்றால் பணத்தை அள்ளி வீசினால் மட்டுமே ஜெயிக்கமுடியும் என்ற நிலை. இவர்கள் செய்யும் செலவை அந்த ஊராட்சியில் இருந்து எடுப்பது கடினமான ஒன்று. பல வருடங்களுக்கு முன்பு அவர் போட்டியிட்டார் நல்ல செலவு செய்தார். அவர் வெற்றியும் பெற்றார்.

கொஞ்சகாலத்தில் அவர் என்னிடம் சோதிடம் பார்த்தார். அவருக்கு ஆறாவது வீட்டு தசா நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நான் சொன்னேன் இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு பணம் தேடிவரும். நல்ல செல்வாக்குடன் வாழபோகிறீர்கள் என்று சொன்னேன். அவர் சொன்னார் அந்த ஊராட்சியில் பணம் என்பதே கிடையாது. தெருவிளக்கு போடகூடா பணம் இல்லை. எங்கு இருந்து பணம் வரும் என்று கேட்டார். நான் உங்களுக்கு வரும் என்று மட்டும் சொன்னேன். அவர் போய்விட்டார்.

சரியாக ஒரு மாதத்திற்க்கு பிறகு அரசாங்கத்தில் ஏரி ஆறு போன்றவற்றை தூர்வார வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதனை செயல்படுத்தினார்கள். தலைவர் காட்டில் பணமழை கொட்டியது. இப்படியும் தசா செயல்படும் என்பதை சொல்லுவதற்க்காக இதனை உங்களிடம் சொன்னேன்.

அவரின் சுயகுணத்தை ஆராய்ந்து தசாபலனை சொல்லும்பொழுது சரியான பலன் கிடைக்கும். ஒருவர் நல்லவராக இருந்து மறைவுவீட்டு தசா நடைபெற்றால் அவரை உண்டு இல்லை என்று செய்துவிடும். ஒருவரின் குணாதிசயத்தை கண்டுபிடித்து அவருக்கு பலனை நாம் சொல்லவேண்டும்..

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: