Followers

Wednesday, July 10, 2013

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    நாளை 11/07/2013 வியாழக்கிழமை அன்று நமது அம்மனின் மாதாந்திர பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையைப்பற்றி பதிவில் முன்னோடியே சொல்லவில்லை என்றாலும் நமது நண்பர்கள் என்னை இந்த மாதத்தில் முதலிலேயே என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்கள். 

கிருஷ்ணப்ப சரவணன் என்ற வெளிநாட்டு நண்பர் அவர்கள் மாதத்தில் முதலில் பணம் அனுப்பினார்.  அவர்க்காக இந்த மாத பூஜையை செய்விக்கப்படுகிறது. மீதி தொகை முதல் மாத பூஜையின் மீதி இருந்தது அதனை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இந்த பூஜையைப்பற்றி கடந்த மாதம் வெளியிட்ட போது ஒரு சிலர் இதனை விமர்சனம் செய்தார்கள். அவர்களுக்களின் நோக்கம் நான் இந்த பணத்தை எடுத்து சம்பாதித்துவிடுவேன் என்ற காரணத்தில் இருக்கலாம். ஒரு சிலர் என்னிடம் நேரிடையாகவே கேட்பார்கள் நீங்கள் பணத்திற்க்கு பின்னாடி சென்றுவிடாதீர்கள் என்றும் சொல்லியுள்ளார்கள். இவர்களின் எண்ணம் என்ன என்றால பணம் சம்பாதித்தால் இவர் ஆன்மீக சேவை செய்யமாட்டார் என்று தோன்றுகிறது அதனால் அப்படி நினைக்கலாம் என்ற நினைக்கிறேன். அதாவது நமது மக்களின் முட்டாள் தனம் என்று தான் இதனை சொல்லவேண்டும். ஏன் என்றால் நமது கோவிலில் நாம் போடும் பணம் நமது மக்களுக்காகவாக செலவு செய்கிறார்கள் என்றால் கண்டிப்பாக இல்லை.

ஒரு வாரத்திற்க்கு முன்னாடி என்னை சந்தி்க்க ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் என்னிடம் சொன்னார். நமது மதம் என்பது வைரம் என்றார். உப்பை தான் தெருவில் கூவி கூவி விற்பார்கள். வைரத்தை கூவி விற்கமாட்டார்கள் என்றார். வைரத்தை விரும்புகிறவன் அதனை தேடி கண்டிப்பாக செல்வான் என்றார். நல்லது தான் இவர் சொல்லுவதையும் ஏற்றுக்கொள்ளலாம்.  நமது மதத்தில் உள்ள நல்ல விசயங்களை தெரியாமலே பல பேர் இருக்கிறார்கள். அப்படிபட்ட மக்களுக்கு வைரம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை காட்டவேண்டும் என்பதற்க்காக மட்டுமே நான் பணத்தை நோக்கி செல்ல வேண்டிருக்கிறது. 

நீங்கள் அனைவரும் ஒரு நல்ல வேலையில் இருப்பீர்கள். நீங்கள் இதனை படிப்பீர்கள் உங்களின் வேலை உண்டு உங்களின் குடும்பம் உண்டு என்று இருப்பீர்கள். அடுத்த வீட்டில் உள்ளவர்களை கூட நீ்ங்கள் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டீர்கள். அப்படிபட்ட நிலைமையில் நீங்கள் இருக்கும்பொழுது இதனைப்பற்றி எல்லாம் உங்களால் எப்படி பிறர்க்கு சொல்லமுடியும். இதனை பாமர மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே பணத்தை நோக்கி நான் செல்லவேண்டியிருக்கிறது.

பணம் இருந்தால் மட்டுமே பல நல்ல விசயங்களை செயல்படுத்த முடியும் என்பதால் பணத்தை நமது ஆன்மீகவாதிகள் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிற மதங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது அவர்கள் அதனை வைத்து செயல்படுத்துகிறார்கள். நமது மதங்களுக்கு நமது மக்கள் கொடுத்தாலும் அதனை அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது. நமது நிலைமை இப்படி இருக்கும்பொழுது என்னை போல் இருப்பவர்கள் குறைந்தது ஆயிரம் பேர்க்காவது இதனை கொண்டு செல்லவேண்டும் அதனை நிறைவேற்ற பணம் தேவைப்படுகிறது. எனக்கு பணம் மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அம்மனின் பூஜைக்கு என்று நான் ஆதரவு தரும் கம்பெனிகள் பணம் கொடுக்கிறது. அதனைப்பற்றி கவலை இல்லை. நான் செயல்படுத்துகிறேன்.அந்த பணமும் என்னுடைய உழைப்பால் வருகிறது. அம்மன் துணை இருப்பதால் அதற்கும் செல்லுகிறது.ஒவ்வொரு மாதமும் பூஜை எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெறும். அதற்கு தேவையான பணத்தை கம்பெனிகள் ஏற்றுக்கொள்ளும்.

நாளை அம்மனை நினைத்துக்கொள்ளுங்கள். அம்மனின் அருள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். வேண்டுதலையும் வைத்துக்கொள்ளங்கள்.

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் திருச்சி நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

Cell : 9551155800

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




No comments: