Followers

Sunday, December 22, 2013

குரு தசா பலன்கள் பகுதி 47


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசா சனிபுத்தியின் பலன்களை பார்த்து வருகிறோம். சனிக்கிரகம் பத்தாவது வீட்டில் நின்று புத்தியை நடத்தினால் எப்படி பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

பத்தாவது வீட்டில் சனிக்கிரகம் இருக்கும்பொழுது தன்னுடைய தாய் தந்தையருக்கு கர்ம காரியங்களை செய்யவைப்பார் அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செய்கின்ற வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

பத்தாவது வீட்டில் சனிக்கிரகம் நின்று தன்னுடைய மூன்றாவது பார்வையில் பனிரெண்டாவது வீட்டை பார்க்கும் விரைய செலவுகள் ஏற்படும். அதுவும் சுபவிரையுமாக இருக்கும். தொழில்கள் நடத்தும் இடத்தில் பூஜைக்கு என்று கூட செலவு செய்யவேண்டிவரும்.

பத்தாவது வீட்டில் சனிக்கிரகம் நின்று நேரடி பார்வையாக நான்காவது வீட்டை பார்க்கும். சுகஸ்தானத்தை பார்ப்பதால் நோய்கள் கூட வருவதற்க்கு வாய்ப்பு உண்டும. தன்னுடைய சுகம் கெடுகிறது என்றால் நோய் வந்தால் தான் கெடும்.

பத்தாவது வீட்டில் நின்று சனிக்கிரகம் பத்தாவது பார்வையாக ஏழாவது வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் சிறு சிறு தகறாறுகள் ஏற்படும்.உங்களை தொடர்புக்கொள்பவர்களும் உங்களிடம் பிரச்சினை ஏற்படுத்துவார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: