Followers

Sunday, December 29, 2013

குரு தசா பலன்கள் பகுதி 67


வணக்கம் நண்பர்களே!
                    குருவின் தசாவில் அடுத்து சுக்கிரனின் புத்தியைப்பற்றி நாம் பார்க்கலாம். குருவுக்கும் சுக்கிரனுக்கும் எப்பொழுதும் சரிவராது இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டு மனிதனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை எப்படி இருக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

பொதுவாக இவர்களுக்கு பிரச்சினை கொடுப்பது என்பது தனுசு மீனம் ரிஷபம் துலாம் இந்த நான்கு ராசிகளை தான் இருக்கும். இவர்கள் தான் இவர்களின் கொடுமையை அறிவார்கள். மீதி உள்ளவர்களுக்கு அந்தளவுக்கு இருக்காது. 

ரிஷபராசியில் பிறந்தவர்களுக்கு குரு தசா மிகப்பெரிய கெடுதலை எல்லாம் செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் இந்த ராசிக்கு குரு நல்ல இடத்தில் அமர்ந்தால் கூட கெடுதலை செய்திருக்கிறது.

ஒரே எந்தநேரமும் சண்டைப்போட்டுக்கொண்டு இருப்பவர்கள் சேர்ந்து எப்படி பலனை தருவார்கள் என்பதைப்பற்றி தான் இனி பார்க்கபோகிறோம். அதே நேரத்தில் ஒரு நன்மையும் இதில் நடைபெறும். குரு கொடுத்தால் சுக்கிரன் கொடுக்கமாட்டார். சுக்கிரன் கொடுத்தால் குரு கொடுக்கமாட்டார். யாராவது ஒருவர் கொடுத்து உதவுகிறாரே என்று நாம் நினைத்துக்கொள்ளவேண்டியது. 

குரு நேர்மையான வழியில் செல்வத்தை தருவார். சுக்கிரன் கொஞ்சம் தவறான வழியில் செல்வத்தை தருவார். எப்படி கொடுத்தால் என்ன நமக்கு செல்வம் வந்தால் சரி என்று நினைக்கிறீர்களா இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: