Followers

Monday, December 23, 2013

கர்வம் வேண்டாம்


வணக்கம் நண்பர்களே!
                    நமமுடைய சோதிட வாடிக்கையாளர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்கும்பொழுது இந்த சோதிடர்கள் எல்லாம் செய்வதை பார்த்தால் உலகத்தில் இவர்களை போல் ஒரு கிறுக்குபிடித்த சோதிடர்கள் எல்லாம் இருக்கிறார்களாக என்று நினைக்கதோன்றுகிறது.

இன்று காலையில் இருவர் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். அவர் என்ன சேதி தான் அப்படி இருந்தது. இவர்கள் ஜாதகத்தை பிரபல சோதிடர்களிடம் காட்டி கேட்கும்பொழுது அந்த ஜாதகத்தை பார்த்துவிட்டு அதனை தூக்கி வெளியில் எறிவது போல் செய்கிறார்கள் என்று சொன்னார்கள்.

எப்படிப்பட்ட கெட்ட ஜாதகமும் அந்த ஜாதகத்தில் ஏதாவது ஒரு கிரகம் நல்ல நிலையில் பலனை தந்து அந்த ஜாதகரை காப்பாற்றும். சோதிடர்களை கேட்டுக்கொண்டு எந்த கிரகமும் இயங்கவில்லை என்பதை சோதிடர்கள் முதலில் புரி்ந்துக்கொள்ளவேண்டும். 

அடிக்கடி நண்பர்களிடம் சொல்லும்வார்த்தை நாலு சோதிடபுத்தகத்தை படித்தவுடன் சோதிடர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்றால் நம்மை கேட்டு விட்டு தான் கிரகங்கள் இயங்குவது போல் நடந்துக்கொள்வது இயல்பு .அதனை விட்டு விட்டு சாதாரணமனிதன் போல் இருக்கவேண்டும் என்பேன். 

எந்த ஒரு மனிதனுக்கும் முழுமையான பலனை யாராலும் சொல்லிவிடமுடியாது. எந்த ஒரு ஜாதகத்தையும் ஒதுக்கிவிடமுடியாது என்பதை முதலில் ஞாபகம் வையுங்கள். அனைவரும் கர்மாவை அனுபவிக்க வந்தவர்கள்.

சோதிடர்களுக்கு நான் தான் கடவுள் என்ற நினைப்பு வந்துவிடுகிறது. தயவு செய்து யாரும் இப்படி நடந்துக்கொள்ளாதீர்கள். ஒரு மனிதர் உங்களை தேடி வந்தார் என்றால் கடவுள் அவரை உங்களிடம் அனுப்பியுள்ளார். அவர்களுக்கு தேவையானவற்றை நீங்கள் செய்யவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: