Followers

Saturday, December 21, 2013

குரு தசா பலன்கள் பகுதி 38


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சனியின் புத்தியைப்பற்றி பார்த்து வந்தோம். சின்ன சின்ன விசயங்களாகவே அனைத்தையும் சொல்லிக்கொண்டு வருகிறேன். அப்பொழுது மட்டுமே உங்களுக்கு எளிதில் புரியும். அதே நேரத்தில் அப்படியே கொட்டினால் நீங்கள் வாந்தி எடுத்துவிடுவீர்கள் என்பது தெரிந்து சிறிய தகவலாகவே குரு தசா முழுவதையும் பார்க்கலாம்.

சனி கிரகம் கெட்டு இருந்து புத்தி நடைபெற்றால் எப்படி பலனை தரும் என்பதை பார்க்கலாம்

வேலை இருந்தால் வேலை போய்விடும். தேவையில்லாமல் மனபதட்டம் ஏற்படும். வேலையில் இருந்தாலும் மேல் அதிகாரிகளால் பிரச்சினை ஏற்படும். உடல் நிலை பாதிக்கப்படும். நரம்பு சம்பந்தமான வியாதிகள் வரும். விரோதம் உருவாகும். பெரியவர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்படும்.

அரசாங்கத்தால் விரோதம் ஏற்படும். அரசாங்கவழியில் தொந்தரவை அதிகமாக சந்திப்பீர்கள். வேலைக்காரர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். வீட்டில் உள்ள செல்லபிராணிகள் இறக்க கூடும். புதிய நாட்டிற்க்கு சென்று அங்கு பிரச்சினையில் மாட்டிவீர்கள். மேற்கு திசை பயணத்தால் விபத்துக்கள் ஏற்படும்.

செய்கின்ற காரியம் கெட்டுவிடும் அதாவது காரிய நாசம் ஏற்படும். எதனை எடுத்தாலும் தடங்கல் உருவாகும். ஒரு வேலையும் ஒழுங்காக முடிக்கமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: