Followers

Tuesday, December 24, 2013

கடவுளின் ஆசி


வணக்கம் நண்பர்களே!
                    அனைவரும் மார்கழி மாதத்தை நன்றாக பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். பல நண்பர்கள் விடியற்காலையில் எழுந்துவிடுகிறீர்கள என்று நினைக்கிறேன். என்னை தொடர்புக்கொண்டு பல நண்பர்கள் சார் நீங்கள் சொன்னது போல் விடியற்காலையில் எழுந்து கோவிலுக்கு சென்று தரிசித்துவிட்டு வருகிறோம். மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லியுள்ளார்கள்.

மார்கழி மாதத்தில் மட்டும் தான் விடியற்காலையில் எழுந்து விடவேண்டும். மீதம் உள்ள மாதங்களில் நல்ல தூங்கவேண்டும் என்பது இல்லை. மார்கழி மாதம் நமக்கு முதலில் கற்று தருகிறது. அதனை நாம் பின்பற்றி அடு்த்துவரும் மாதங்களிலும் எழுந்துவிடவேண்டும்.

உங்களை சுற்றி இருக்கும் பணக்காரர்களை பார்த்தால் விடியற்காலையில் எழுந்துவிடுவார்கள். அவர்கள் பணக்காரர்களாக இருப்பதற்க்கு முதல் காரணமே இது மட்டுமே. விடியற்காலையில் எழுந்துவிட்டால் நீங்கள் பணக்காரர்களாக ஆவது உறுதி.

ஒவ்வொரு ஆன்மீகவாதிக்கிட்டையும் சென்று காத்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. அவர்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்று பார்த்தக்கொண்டு நிற்கவேண்டியதில்லை. விடியற்காலையில் எழுந்துவிட்டால் கடவுளே உங்களை ஆசீர்வாதம் செய்துவிடுவார். கடவுளே ஆசீர்வாதம் செய்துவிட்டால் பிறகு மனிதர்களின் ஆசி எதற்கு. நண்பர்களே விடியற்காலையில் எழுந்து உங்களின் பீடையை விரட்டுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: