Followers

Friday, December 20, 2013

ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு


வணக்கம் நண்பர்களே!
                    சனிக்கிழமை அன்று சனிகிரகத்தின் பாதிப்பில் இருப்பவர்களை ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு செய்ய சொல்லிருந்தேன். இதுவரை பல பேர்கள் செய்து இருக்கின்றனர். ஒரு சிலர் செய்யாமல் கூட இருப்பார்கள். அப்படி இருப்பவர் சனிக்கிழமை சென்று செய்துவிடுவது நல்லது.

மார்கழி மாதத்தில் நீங்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு செய்வது நல்லது. உங்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுப்பார்.ஆஞ்சநேயர் சனிக்கிரகத்திற்க்கு மட்டும் இல்லை. நீங்கள் எதனை வேண்டினாலும் செய்துக்கொடுப்பார். வேண்டுதல் நியாயமாக இருக்க வேண்டும்.

வெண்ணைக்காப்பை செய்பவர்கள் ஆஞ்சநேயர் சிலை சின்ன சிலையாக இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். பெரிய சிலையாக இருந்தால் உங்களுக்கு செலவு அதிகமாக போய்விடும்.

கோவிலுக்கு செய்யும் செலவு எப்படியும் அதனை விட பலமடங்கு திருப்பிவரும். இதனை தெரிந்து தான் பணத்தை கொண்டு சென்று கொட்டுகிறார்கள். நீங்கள் கடன் வாங்கி செலவு செய்துவிடாதீர்கள். இருக்கின்ற பணத்தை வைத்து சாமி கும்பிட்டால் போதும்.

வெண்ணைக்காப்பு செய்தவர்கள் வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்கு செய்து சாத்தினால் போதும். வெண்ணைக்காப்பு செய்ய பணம் இல்லாதவர்கள் வெற்றிலை மாலையை சாத்திவிடுவது நல்லது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: