Followers

Wednesday, December 18, 2013

குரு தசா பலன்கள் பகுதி 25


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். குரு கிரகம் பத்தாவது வீட்டில் நின்று தன்னுடைய தசாவை நடத்தினால் எப்படி பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

குரு கிரகம் நல்லநிலையில் இருந்து தசா நடைபெற்றால் 

கர்மவீட்டில் நின்று தசா நடைபெறும் பொழுது வேலையில் பதவி உயர்வு தேடிவரும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் எந்த வித சிக்கலும் இல்லாமல் வேலை செய்துக்கொண்டிருப்பீர்கள்.

பத்தாவது வீட்டில் குரு இருந்து தனது ஐந்தாவது பார்வையில் இரண்டாம் வீட்டை பார்க்கும் அப்படி பார்ப்பதால் பணவரவு என்பது வந்துக்கொண்டே இருக்கும். தனவீட்டை குரு பார்த்துக்கொண்டு தசா நடத்துவது நல்லது. 

குரு கிரகம் ஒன்பதாவது பார்வையால் ஆறாவது வீட்டை பார்க்கிறது. எதிரிகள் விலகுவார்கள். நோய்கள் இல்லாமல் இருக்கும்.கடன்கள் இருந்தால் கடன்களை கொடுப்பீர்கள். புதிய கடன்கள் உருவாகாது.

குரு கிரகம் கெட்டு தசா நடந்தால் ஒரு வேலையும் உருப்படியாக செய்யமாட்டீர்கள். ஒரு கம்பெனியில் ஒரு மாதத்திற்க்கு மேல் தங்கமாட்டீர்கள்.

பத்தில் நின்று குரு கிரகம் தசா நடத்தினால் வேலையில் மிகப்பெரிய சிக்கல் வருவது அனைவருக்கம் பொதுவாக நடைபெறுகிறது.  மீதி உள்ள பலன்கள். நல்லநிலையில் குருவின் தசாவிற்க்கு சொன்ன பலன்கள் எதிராக நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: