Followers

Wednesday, December 25, 2013

குரு தசா பலன்கள் பகுதி 58


ணக்கம் ண்பர்களே !
                    குரு தசாவில் புதனின் புத்தியை பார்த்து வருகிறோம். தொடர்ச்சியாக பார்க்கலாம்.

புதன் மூன்றாவது வீட்டில் இருந்து புத்தி நடைபெற்றால் அவர்கள் கமிஷன் வழியாக சம்பாதிக்க வைப்பார். எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்து சம்பாதிக்கும் வேலையையும் இருக்கும். மாமன் உதவுவார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவிசெய்யகூடும். இனிமையாக இசையை ரசிக்கவைப்பார். கவிதை புலமையும் இருக்கும். புத்தகம் எழுதுவதற்க்கு இந்த காலம் அருமையான காலமாக இருக்கும்.

தினமும் உங்களை கோவிலுக்கு செல்ல வைப்பார். தீர்த்த யாத்திரையும் நடக்கும். அதே நேரத்தில் நீங்கள் இந்த நேரத்தில் மகாவிஷ்ணுவையும் தீவிரமாக வணங்க ஆரம்பிப்பீர்கள். மகாவிஷ்ணு சம்பந்தப்பட்ட விசயங்களில் மனது அதிகமாக ஈடுபடும்.

புதன் நான்காவது வீட்டில் இருந்து தன்னுடைய புத்தியை நடத்தும்பொழுது ஒரு மனையை வாங்கி போடுவீர்கள் அதே நேரத்தில் அடுத்த மனையும் உங்களை தேடி வரும். வீடு வாகனங்களை வாங்குவதற்க்கு இந்த காலம் ஏற்றமிகு காலம். உங்களை தேடி அனைத்து வாய்ப்புகளும் புதன் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

தாய் வழி உள்ள மாமன்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கல்வி வாய்ப்பு உங்களை தேடிவரும். இந்த நேரத்தில் படிப்பை நோக்கியே உங்களின் மனம் தீவிரமாக செல்லும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: