Followers

Saturday, December 14, 2013

சனிப்பிரதோஷம்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று சனிப்பிரதோஷம். அனைவரும் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வாருங்கள். 

எப்பொழுதும் சிவவழிபாடு செய்வது உண்டு அதனை கோவில் சென்று வழிபடுவது மட்டுமே முறையாக வைத்துள்ளேன். சிவனையோ அல்லது பெருமாளாக இருக்கட்டும் வீட்டில் வைத்து வழிபடும்பொழுது அந்த வீடு மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும்.

சிவனையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது வீட்டை தினமும் தண்ணீர் விட்டு கழுவவேண்டும். நீங்கள் பூஜை செய்யும் நேரத்தில் வீட்டில் யாரும் தூங்கிக்கொண்டு இருக்ககூடாது. வீட்டில் படுக்கை விரித்து வைத்திருக்ககூடாது.  

அபசத்தம் இருக்ககூடாது. நல்ல வார்த்தை மட்டுமே பேசவேண்டும். இப்படி இருந்தால் நீங்கள் சிவனை வைத்து பூஜை செய்யலாம்.பிரம்மசாரிகளாக இருந்தால் கூடுதல் சிறப்பு.ஆஞ்சநேயரும் இப்படிபட்ட தெய்வம் தான் அவருக்கும் இதைப்போல் நீங்கள் பின்பற்றி வரவேண்டும்.

இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட கட்டுபாட்டோடு இருப்பது கடினமான ஒன்று அவர்களுக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை நாம் செய்யும்பொழுது அது நமக்கு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்திக்கொடுத்துவிடும். அதனால் நீங்கள் கோவிலில் சென்று வழிப்பட்டுவருவது நல்லது. 

இன்று கோவிலுக்கு செல்லமுடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வாருங்கள். வெளிநாட்டில் மற்றும் வேலையில் இருப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்து வேண்டிக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: