Followers

Monday, December 23, 2013

பூர்வ புண்ணியம் 65


வணக்கம் நண்பர்களே!
                    ஐந்தில் நிற்கும் தீயகிரகம் தன்னுடைய சுயத்தை எந்த நேரமும் காட்டுவதற்க்கு தயாராக இருக்கும். அந்த கிரகங்களை நீங்கள் வெற்றி பெற விட்டுவிடகூடாது. 

ஐந்தில் தீயகிரகங்கள் நிற்கும் ஆட்களை நான் பலபேரை பார்த்திருகிறேன். அவர்கள் கோபபட்டுவிட்டால் அப்புறம் அவர்களை சாந்தப்படுத்தமுடியாது. என்ன காரணம் என்றால் அவர்களின் கர்மா அதன் வழியாக வருகிறது. அவர்களின் வாழ்வை சீரழிக்கிறது என்ற அர்த்தம்.

நீங்களே ஜாதங்களை எடுத்து பார்த்தால் தெரியும். இவர்களை எந்தவிதத்திலும் சமாதானம்படுத்த முடியாத நபர்களாகவே இருக்கின்றனர். அவர்களிடம் இதனை எடுத்து சொன்னாலும் கேட்பது கிடையாது. மாறாக அவர்களின் வாழ்க்கை சீரழிவதை அவர்களே ஏற்படுத்திக்கொள்கிறார்களே தவிர கேட்பதில்லை. 

உங்களுக்கு ஐந்தில் தீயகிரகங்கள் இருந்தால் நீங்கள் நல்லவர்கள் தான் ஆனால் நீங்கள் எந்த இடத்தில் உணர்ச்சி வசப்படுகிறீர்களோ அந்த இடத்தில் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

நமக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது என்று நினைத்துக்கொண்டு பொறுமையாக அனைத்து விசயத்திலும் கையாண்டால் உங்களின் வாழ்வும் சிறக்கும் உங்களின் கர்மாக்கும் புண்ணியம் சேர்த்துக்கொண்டு அதில் இருந்து விடுபடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

RAMADU Family said...

உண்மை ; 99% அமைதியை இருந்தாலும் ; கோபம் வெற்றி அடைந்து என்னை தோல்வி அடைய செய்துவிடுகிறது ; 5ல் கேது பகவான்

Suresh said...

It is true, sir please continue your blog, i have Sun and Mercury in my 5th place, these grahas stands as enemy in Kadagam... i m meena lagnam