Followers

Wednesday, December 25, 2013

சோதிட அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    நான் பல ஜாதகங்களை பார்த்து இருந்தாலும் ஒரு சில ஜாதங்களை பார்க்கும்பொழுது என் மனதுக்குள் மிகந்த கவலையை அடையசெய்யும் என்னடா இப்படி எல்லாம் கடவுளின் திருவிளையாடல் இருக்கிறது என்று தோன்றும். ஒவ்வொரு வீடாக அடிப்பட்டு வந்து இருக்கும். அவர்கள் எங்கும் தப்பிக்கமுடியாத மாதிரி இருக்கிறது.

இவர்களை கடவுளின் பார்வையில் வைத்து காப்பாற்ற வேண்டும் ஆனால் அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இது மிக பெரிய சிக்கலாக இருக்கும். முதலில் ஏன் இப்படி இவர்களுக்கு ஜாதகம் அமைந்தது என்று பார்த்தால் ஒன்று அவர்களின் முன்ஜென்மம் மற்றோன்று அவர்களின் குடும்பத்தினர்கள் செய்துக்கொண்டிருக்கும் தவறு இவற்றால் வந்து இருக்கிறது. 

இப்படிப்பட்ட ஜாதகத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு இராகு கேது ஏற்படுத்தி இருக்கும் தோஷம் பித்ரு தோஷமாக இருக்கும். பித்ரு தோஷம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு எந்த விதத்திலும் அவர்கள் காரியம் வெற்றி அடையமுடியாத படி செய்து வைத்திருக்கும்.

இதற்கு நீங்களே இவர்களை அழைத்துக்கொண்டு இராமேஸ்வரம் சென்றுவந்துவிடுங்கள். அவர்கள் தனியாக செல்ல அனுமதிக்காதீர்கள். ஏன் என்றால் அவர்கள் தனியாக செல்லும்பொழுது அவர்களுக்கு தோஷம் விலகுவதில்லை. சோதிடர்களாக நீங்கள் அழைத்து செல்லும்பொழுது எளிதில் விலகும். 

சோதிடர்களிடம் அப்படி என்ன இருக்கிறது என்றால் சோதிடர்கள் நாள் முழுவதும் ஒவ்வொரு கிரகத்தின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லவா. அதுவே மிகப்பெரிய மந்திரம். நீங்கள் சென்றால் அனைத்து தோஷமும் விலகும்.

யாரும் அவ்வளவு எளிதில் இதற்கு சம்மதிக்கமாட்டார்கள் ஏன் என்றால் சோதிடர் ஓசியில் இராமேஸ்வரம் சென்று வருவதற்க்கு பிளான் போட்டுவிட்டார் என்று நினைப்பார்கள். இவர்களுடன் செல்லுவதால் நமக்கு தான் கர்மம். சொன்ன சொல்லிவிட்டு போகிறார்கள் பிடிவாதமாக அழைத்துக்கொண்டு சென்று விட்டு வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: