Followers

Tuesday, December 17, 2013

அம்மனின் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                    காயத்ரி மந்திரம் செய்பவர்களை நான் ஒரு போதும் சோதனை என்பதை செய்யமாட்டேன்அவர்களே சோதனை செய்துக்கொள்ளவேண்டியது எப்படி என்பதை சொல்லிவிடுவேன். பல நண்பர்கள் என்னிடம் வந்து எனது நிலையை பாருங்கள் சோதனை செய்து பாருங்கள் என்று கேட்பார்கள். அதனையும் தவிர்த்து விடுவது உண்டு.

ஏன் நான் இப்படி செய்கிறேன் என்றால் நீங்களே கஷ்டப்பட்டு செய்துக்கொண்டு இருக்கிறீர்களே இதனை நீங்களே பார்த்துக்கொள்ளலாம் அல்லவா.உங்களை நான் சோதனை செய்வது அந்தளவுக்கு நன்றாக இருக்காது என்பதால் நான் செய்வதில்லை. இதில் நான் தலையிடுவதில்லை ஆனால் அம்மனின் பங்கு அதிகமாக இருக்கும்.

நீங்கள் ஒழுங்காக செய்து வந்தால் கண்டிப்பாக அம்மன் ஒரு நாள் உங்களை பார்க்கவரும். உங்களால் அதனை பார்க்கமுடியும். இதனால் வரை நான் இதனைப்பற்றி சொன்னதில்லை. ஏன் என்றால் ஏதாவது தெரிகிறது என்று நான் சொன்னவுடனே நீங்களே கற்பனை செய்துக்கொள்வீர்கள் அல்லவா அதனால் நான் சொல்லாமல் இருந்தேன். அதிகமான நண்பர்கள் இப்பொழுது செய்துக்கொண்டு வருகின்றனர்.

உங்களை பார்க்க கண்டிப்பாக அம்மன் வரும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வெறும் கண்களால் அதனை பார்க்கமுடியும். இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மந்திரம் சொல்லும்பொழுது உங்களை கண் திறந்துக்கொண்டு செய்ய சொன்னேன்.

பல பேர்கள் இதனை பார்த்திருப்பார்கள். நீங்களும் எந்தவித கற்பனையும் இல்லாமல் நம்பிக்கையோடு செய்யுங்கள். உங்களின் கண்களுக்கு அம்மன் தெரிந்தால் அதனை வணங்குங்கள். உங்களுக்கு நமது அம்மன் செய்யும் மிகப்பெரிய ஆசீர்வாதம் இதுவாக இருக்கும்.

இருபத்தி ஒரு நாள் செய்துவிட்டு எனக்கு தெரியவில்லை என்று சொல்லாதீர்கள். நம்பிக்கையோடு பல நாட்கள் செய்தவர்களுக்கு தான் இது தெரிந்து இருக்கிறது. ஒரு நாளில் தெரிவதற்க்கு நாம் ஒன்றும் மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்கள் கிடையாது என்பதை மனதில் வையுங்கள்.

அம்மனின் தரிசனம் செய்தவர்கள் மிகப்பெரிய புண்ணியவான்களாக தான் இருக்கமுடியும் உலகத்தை காக்கும் தாயின் பார்வை உங்களின் மீது விழுகின்றது அல்லவா. நான் பெற்ற இன்பம் பெறுக ஜாதககதம்பத்தால் காயத்ரி மந்திரம் செய்பவர்கள்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: