Followers

Tuesday, December 24, 2013

நேர்மையான வழி


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் பதிவை எல்லாம் படித்துவிட்டு என்னால் அனைத்தையும் செய்துக்கொடுக்க முடியும் என்று எண்ணி தொடர்புக்கொள்கிறார்கள். அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

பல விசயங்களை நான் செய்யும்பொழுது அது நேர்மையான வழியில் இருந்தால் மட்டுமே அதனை செய்வேன். அதற்கு மட்டுமே அம்மன் வழிச்செய்யும். தவறான வழிக்கு துணை புரியாது. நியாயமான வழிக்கு மட்டுமே உங்களுக்கு உதவி செய்யமுடியும். தவறான வழியில் ஒரு போதும் உங்களுக்கு உதவி செய்யமுடியாது. 

பல பேர்கள் சார் நான் ஒரு பெண்ணோடு பழக்கம் வைத்திருந்தேன். அந்த பெண்ணும் நானும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். ஒரு மாதகாலமாக அந்த பெண் என்னோடு பேசுவதில்லை. போன் நம்பரை மாற்றிவிட்டது. அதற்கு உங்களால் உதவ முடியுமா என்று கேட்கிறார்கள்.

பெண்களை வசியம் செய்வது எல்லாம் கஷ்டமான ஒன்று. ஒரு போதும் என்னால் செய்யமுடியாது. காதல் செய்தால் உடனே திருமணம் செய்துக்கொள்ளுங்கள்.அந்த பெண் விட்டுவிட்டு சென்றுவிட்டால் அப்புறம் ஒன்றும் செய்யமுடியாது. 

காதல் செய்பவர்கள் அனைவரும் பார்த்தீர்கள் என்றால் பூர்வபுண்ணியம் கெட்ட ஆட்களாக தான் பெரும்பாலும் இருக்கும். உங்களின் ஜாதகத்தை பார்த்து உங்களுக்கு காதல் திருமணம் நடக்குமா என்று பார்த்த தெரிந்துக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள்.

பணம் சம்பாதிப்பதும் நேர்மையான வழியில் மட்டுமே பணத்தை சேர்க்கவேண்டும். உடனே அள்ளிக்கொட்டுவது எல்லாம் அம்மன் செய்யாது. இதிலும் நேர்மையான வழியில் செய்யமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: