Followers

Sunday, December 15, 2013

அம்மனின் அருள்


ணக்கம் ண்பர்களே!
                    நமது ஜாதககதம்பத்தில் இதுவரை தனிப்பட்ட மனிதரைப்பற்றி குறிப்பிட்டு சொன்னது கிடையாது. அனைத்தும் அம்மனின் பொறுப்பு என்பதால் சொன்னது கிடையாது ஆனால் அம்மன் ஒரு நபரை வைத்து பல நல்ல செயல்களையும் செய்ய வைக்கிறது. அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்று இன்று கட்டளை அதனால் அவரைப்பற்றி சொல்லுகிறேன்.

மாதம்தோறும் ஒரு நபர் மட்டும் விடாமல் அம்மனின் பூஜைக்கு என்று பணம் அனுப்பிக்கொண்டு இருப்பார். அவர் அனுப்பும் பணம் அதிகமாக இருக்கும் அனைவரையும் விட அவர் அனுப்பும் பணம் அதிகம். அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் முதலில் தெரியவே தெரியாது. பல நாட்களுக்கு பிறகு தான் அவரை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

யார் அவர் என்று என்னிடம் பல நண்பர்கள் கேட்டு இருப்பார்கள். அவரைப்பற்றி சொல்லும்பொழுது அவர் ஒரு இளைஞர் அம்மன் மீது உள்ள தீவிர பக்தி காரணமாக அவர் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லுவேன். 

அவர் பணம் அனுப்புவதால் அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்பதில்லை. அவர் எதையும் எதிர்பார்த்து பணம் அனுப்பவில்லை என்று எனக்கு நாள் போக போக தான் தெரிந்தது. ஒரு இளைஞர் இப்படி எல்லாம் பக்தி வைப்பதற்க்கு ஜாதககதம்பம் மட்டும் காரணமாக இருக்கமுடியாது. வேறு ஏதோ காரணம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

நான் நினைத்தது போல் தான் இருந்தது. அவரின் தந்தை இவர் சின்ன பையனாக இருக்கும்பொழுது இருந்தே அவரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்வார் என்று சொல்லிருந்தார். சிறிய வயதில் கற்றுக்கொடுக்கும் பழக்கம் அது கடைசி வரை நீடித்து நிற்க்கும் என்று தெரிந்தது.

இன்று பல இளைஞர்களுக்கு நான் அவரைப்பற்றி சொல்லி தான் இப்படி செய்யவேண்டும் என்று சொல்லுவேன். இன்று பொதுவாக பதிவில் வெளியிட்டுவிட்டேன்.

ஒவ்வொரு மாத பூஜையிலும் பெயரை போடவேண்டாம் என்று தான் சொல்லிருப்பார் நான் தான் பெயரை குறிப்பிட்டு பதிவில் சொல்லிருந்தேன். அவரை பார்த்து பல இளைஞர்கள் திருந்தவேண்டும் என்பதால் பதிவில் போட்டுருந்தேன்.

இதனைப்படித்துவிட்டு நீங்கள் பணம் தொடர்ந்து அனுப்பவேண்டும் என்பது கிடையாது. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பத்து சதவீதம் அல்லது ஐந்து சதவீதமாவது உங்களின் இஷ்டதெய்வம் மற்றும் குலதெய்வத்திற்க்கு என்று அனுப்புங்கள். பல கோவில்கள் பூஜைகள் நடைபெறாமலேயே இருந்துக்கொண்டு இருக்கின்றது. உங்களின் புண்ணியத்தில் அங்கு பூஜை நடைபெறும்பொழுது அது மிகப்பெரிய அளவில் உங்களை காக்கும்.

நீங்கள் வங்கியில் சேர்க்கும் பணம் கூட ஒரு நேரத்தில் உதவாமல் போய்விடும். இப்படி செய்யும் சேமிப்பு உங்களை மற்றும் உங்களின் வாரிசுகளை மிகப்பெரிய அளவில் பாதுக்காக்கும். செய்து பாருங்கள் அந்த வழியாக கிடைக்கும் இன்பம் இந்த உலகத்தில் வேறு எதிலும் இருந்தும் கிடைக்காது.

கடைசி வரை யார் அந்த நபர் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன். அவர் வேறு யாரும் இல்லை வழக்கம்போல் நமது நண்பர் கிருஷ்ணப்ப சரவணன்.

இப்படிப்பட்ட இளைஞர்கள் நமது மதத்தில் பல பேர்கள் இருப்பதால் தான் நமது மதம் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றது. அவரும் அவரின் குடும்பமும் நன்றாக வாழ அம்மன் துணை புரியும். நீங்களும் ஆசீர்வாதம் செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: