Followers

Saturday, December 21, 2013

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    என்னோடு தொழில் தொடர்புக்காக வைத்திருப்பவர்களை அந்த ஊரில் மற்றும் அந்த தொழிலில் அவர்கள் தான் கிங் என்ற நிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இன்று பல பேர்கள் என்னை தொடர்புக்கொண்டு இதற்கு உதவி கேட்டாலும் பல கட்டுபாடுகளோடு தான் அவர்களுக்கு செய்துக்கொண்டு இருக்கிறேன்.

மனிதர்களின் குணம் எனக்கு நன்றாக தெரியும். என்னை தொடர்புக்கொண்டு கேட்டவர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய உதவியை செய்தேன் அதன் பிறகு இவர்கள் எப்படி வருவார்கள் மற்றும் நடந்துக்கொள்வார்கள் என்பதை பொறுத்து அதன் பிறகு ஒவ்வொன்றாக செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு பொறுமையாக இருந்தேன்.

பல பேர்கள் என்னை தொடர்புக்கொண்டு வந்தாலும் இப்பொழுது அதிகப்பட்சமான பேர்கள் ஒழுங்காக நடந்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையை கொண்டுச் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அதற்க்காக வேலைகளை ஆரம்பித்துள்ளேன்.

எனக்கு நேரிடையான வாடிக்கையாளர்கள் இருந்தாலும் ஜாதககதம்பம் வழியாக வந்தவர்களுககு நல்ல முன்னுரிமை கொடுத்து செய்துக்கொடுத்தேன். முக்கால்வாசிப்பேர்கள் ஒழுங்காக பின்பற்றினார்கள். அவர்களுக்கு அடுத்த கட்ட வேலைகள் தற்பொழுது ஆரம்பித்துவிட்டேன்.

புதிதாக பதிவுக்கு வரும் நண்பர்கள் படித்துவிட்டு தொடர்புக்கொள்ளலாம். அப்படி தொடர்புக்கொள்ளும்பொழுது சும்மா தானே வந்து பார்க்கலாம் என்று வராதீர்கள். நல்ல பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று வாருங்கள். உங்களின் வாழ்க்கை தரம் கண்டிப்பாக உயர்த்திக்கொடுக்கப்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: