Followers

Wednesday, December 25, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்களில் ஒரு நிகழ்வைப்பற்றி பார்க்கலாம். ஒரு சாதாரணமாக ஒரு நபர் செய்யும் பூஜைக்கும் நாங்கள் தினமும் வீட்டில் செய்யும் பூஜைக்கும் வித்தியாசம் அதிகமாக இருக்கும். இதோடு நான் எந்த நேரத்தில் பூஜை செய்கிறேன் என்பது கூட வெளியில் தெரியாத அளவுக்கு பார்த்துக்கொள்வேன். 

என்னை பொருத்தவரை ஒரு அப்பாவி தனம் என்னிடம் இருக்கும். குரு கிரகம் நல்ல நிலையில் இருப்பதால் அனைவரையும் நம்பிவிடுவேன். இதனால் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் அதிகம். எளிதில் மனிதர்களை நம்புவது எனது சுபாவம். அப்படி தான் எனக்கு தெரிந்த ஒரு சாமியார் என்னை பயன்படுத்திவிட்டார். உடனே அதனை கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சில பிரச்சினை அப்படி ஏற்பட்டது.

நான் பூஜை செய்யும் நேரத்தை தெரிந்து வைத்துக்கொண்டு அந்த பூஜையை அப்படியே அவரின் செயலுக்கு பயன்படுத்திக்கொள்வது அவரின் வேலையாக ஒரு வாரம் இருந்தது. அதன் பிறகு தான் அதனைப்பற்றியே கண்டுபிடித்தேன். இப்படி சில விஷமிகளும் இருக்கிறார்கள். 

நான் பூஜை செய்யும் நேரத்தை தெரிந்துவைத்துக்கொண்டு அந்த நேரத்தில் அவர்களின் வாடிக்கையாளருக்கு பயனை அனுப்புவது. இப்படி செய்வதால் கர்மா நமக்கு வந்துவிடும். அதன் பிறகு கண்டிபிடித்த அதனை தடைசெய்துவிட்டேன். இப்பொழுது பூஜை நேரத்தை யாரிடம் சொல்லுவதில்லை.

ஒரு சிலர் இருக்கிறார்கள். நாம் பூஜை செய்வதை அவர்கள் எங்கிருந்தும் கண்டுபிடித்து பயன்படுத்துவார்கள். அப்படி அவர்கள் கண்காணிப்பது தெரிந்தது என்றால் உடனே அப்படியே நிறுத்திவிடுவேன். நீங்கள் எல்லாம் பயப்பட வேண்டியத்தில்லை எங்களை போல் ஆட்கள் செய்யும் பூஜையை தான் பயன்படுத்தமுடியும். இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றால் அமானுஷ்ய சக்தி பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 

நம்பினால் நம்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: