Followers

Sunday, December 22, 2013

எங்களுக்கு அம்மன்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னை வந்து சந்தித்தார். அவர் என்னிடம் பேசும்பொழுது ஏன் அனைத்து சோதிடர்களும் அம்மனையே வைத்திருக்கிறார்கள். அம்மனை பற்றியே பேசுகிறார்கள். சிவன், பெருமாள் எல்லாம் செய்யமாட்டார்களா என்று கேட்டார்.

மக்களுக்கு சிவனை மற்றும் பெருமாளை எல்லாம் கற்று தருவோம் நாங்கள் பிழைப்பதற்க்கு அம்மனை வைத்துக்கொள்வோம் என்றேன். முன்காலத்தில் இருந்து பொதுவாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் யாரும் வேலை செய்பவர்கள் அதாவது சோதிடதொழில் செய்பவர்கள் எல்லாம் அம்மனை தவிர வேறு எந்த தெய்வத்தையும் வைத்தக்கொள்வதில்லை.

நான் இன்று அம்மனை வைத்திருப்பதே அவ்வளவு கடினமாக இருக்கின்றது. அதனை கொண்டு நாம் வாழ்க்கையை நடத்துவதற்க்கே கடினமாக தான் இருக்கின்றது. இவ்வளவுக்கும் அது எதனையும் கேட்பதில்லை. அப்படி இருந்தும் கஷ்டம். 

சிவன் பெருமாள் எல்லாம் மிகவும் பெரிய கஷ்டமான வேலை தினமும் அதற்க்காக நாம் நிறைய விசயங்கள் செய்யவேண்டும். நமது வேலையை பார்ப்பதற்க்கே மிகப்பெரிய கஷ்டம் ஏற்படும்பொழுது இதனை வைத்து யார் செய்துக்கொண்டு இருப்பது.அம்மன் என்றால் பிரச்சினையே இல்லை என்று சொன்னேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: