Followers

Sunday, October 12, 2014

ஏழைகளின் திமிர்


வணக்கம் நண்பர்களே!
                      இன்றைய காலத்தில் பல பேர் ஏழையாக இருப்பதற்க்கு அவர்களின் திமிரும் ஒரு காரணமாக இருக்கும். பல வாய்ப்புகள் இருந்தும் ஒரு சிலர் தன்னுடைய திமிரால் முன்னேற்றம் அடையாமல் இருக்கின்றார்கள்.

ஒரு சிலர் நல்ல வாழ்க்கை வாழ்ந்து இருப்பார்கள் அவர்கள் திடீர் என்று ஏதாவது ஒரு வகையில் கீழே விழுந்து இருப்பார்கள். அவர்கள் தன்னுடைய கெளரவத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இது ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து கீழே இறங்கி சென்று பிறரை நாடினால் அவர்களின் குடும்பம் மேலே வரமுடியும்.

ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுத்து இருந்தால் அவர்கள் கொஞ்சம் திமிராக இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். சனிக்கிரகம் இவர்களை கீழே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும்.  செவ்வாய்கிரகத்தின் காரத்துவம் இவர்களை தூக்கி நிறுத்துவதால் இவர்கள் தைரியத்தோடு அனைத்தையும் எதிர்க்கொள்பவராக இருப்பார்கள்.

ஏழைகளாக இருந்துக்கொண்டு தனியாக வசித்து வந்தால் இது பிரச்சினை இல்லை. குடும்பத்தை வைத்துக்கொண்டு வீண் வம்பு தேவையில்லை. நமது ஜாதகத்தில் செவ்வாய் வலுத்த ஆட்கள் நிறைய பேர் இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அதனை எல்லாம் மாற்றிக்கொண்டு வாய்ப்பை தேடி நல்ல வாழ்க்கை வாழுங்கள்.
நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.



No comments: