Followers

Monday, October 6, 2014

ஆத்ம சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் 3 A/c யில் பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன். இரயில் பயணங்களில் உங்களுக்கு பதிவை தருவது எனக்கு பிடித்தமான ஒன்று. ஏன் என்றால் இரயில் உள்ளவர்கள் யாரும் பேசமாட்டார்கள். A/c கோச்சில் இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை. நான் சொல்ல வந்த மேட்டருக்கு வந்துவிடுகிறேன்.

என்னை ஒரு சிலர் வேலை செய்ய சொல்லும்பொழுது ஒரு சில தகவல்களை சொல்லுவார்கள். அதனை பார்த்து நான் எனக்குள் சிரிப்பது வழக்கம். அதாவது ஒருவரிடம் இருந்து ஒரு வேலையை எதிர்பார்ப்பதாக இருந்தால் சார் அவரின் துணி வேண்டுமா அல்லது அவரின் போட்டோ வேண்டுமா என்று கேட்பார்கள். 

என்னை மாந்தீரிகவாதி என்று நினைத்துக்கொண்டு தான் இந்த மாதிரி பேசுகிறார்கள் என்று நான் நினைப்பது உண்டு. இது எதுவும் தேவையில்லை. நமது சக்தியை வைத்து என்னிடம் வருபவர்களுக்கு வேலை செய்துக்கொடுக்கிறேன். அடுத்தவர்களின் துணி போட்டோ எதுவும் நமக்கு தேவையில்லை. 

நான் செய்யும் அனைத்து வேலையும் என்னுடைய ஆத்மாவின் சக்தி மற்றும் அம்மன் சக்தி இணைந்து வேலையை செய்யும். வேறு எதுவும் கிடையாது. எனது ஆத்மாவை தூய்மைப்படுத்த குரு அவர்கள் இருக்கிறார். அவரின் சக்தியை வைத்து எனது ஆத்மா சுத்தம் அடைந்து வேலை நடைபெறுகிறது.

அனைத்து வேலையும் நேர்மையான வழியில் மட்டுமே செய்ய முடியும். இதனை நன்றாக ஒரு சிலர் உணர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் வந்து உங்களின் ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று கேட்டுக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஒரு சிலருக்கு இது எதுவும் தெரியாது.

ஒவ்வொருவரும் ஆத்மாவை நல்ல சக்தியோடு வைத்திருந்தால் கண்டிப்பாக நீங்களும் இந்த வேலையை எளிதாக செய்ய முடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: