Followers

Monday, October 6, 2014

தூய்மை


வணக்கம் நண்பர்களே!
                                தூய்மையாக இருக்கவேண்டும் என்று நான் பல முறை சொல்லியுள்ளேன். பல பேர்கள் தன்னை தூய்மை படுத்ததா காரணத்தால் மட்டுமே அதிகமான வறுமைக்கு காரணமாகிறார்கள். உடலில் தூய்மை இல்லை என்றால் மூதேவி தான் உடலில் குடியிருக்கும். பல பேரை நான் சந்திக்கும்பொழுது மூதேவியின் வாரிசாகவே இருப்பது தெரிகிறது.

அதிகமான நபர்கள் தன்னையும் தூய்மையாக வைத்துக்கொள்வதில்லை நாட்டையும் தூய்மையாக வைத்துக்கொள்வதில்லை. நான் பல நேரங்களில் நினைப்பது உண்டு ஆப்பிரிக்காவின் திட்டும் இந்திய திட்டும் பூமியில் ஒன்றாக இருந்து இருக்கவேண்டும். பிறகு இந்த பூமி திட்டு பிரிந்து சென்று இருக்கவேண்டும் என்று எனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருப்பேன்.

ஆப்பிரிக்காவில் உள்ள மனிதர்கள் போல் தற்பொழுது அந்தமானிலும் இருக்கிறார்கள். அதேப்போல் பொதுஇடங்களில் ஆப்பிரிக்கா மக்களும் இந்திய மக்களும் அசிங்கம் செய்வது போல் வேறு எந்த நாட்டில் உள்ள மக்களும் செய்யமாட்டார்கள்.

இவர்களுக்கு கண்டிப்பாக தூய்மைப்பற்றி சொல்லிக்கொடுத்து தான் திருத்தவேண்டும். இது சாத்தியப்படுவது கடுமையான சட்டத்தால் மட்டுமே முடியும். அடுத்தது இருக்கின்ற பாக்கு கம்பெனி எல்லாம் மூடவேண்டும். இந்தியா முழுவதும் எச்சில் துப்பியே அசிங்கப்படுத்துகிறார்கள். தூய்மை என்பது நமது நாட்டிற்க்கு கண்டிப்பாக தேவை. 

பல நேரத்தில் ஜாதககதம்பத்தில் தூய்மையாக இருங்கள் என்று சொல்லியுள்ளேன். அனைவரும் கடைபிடிப்பது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: