Followers

Wednesday, October 15, 2014

வெற்றி பெறுவதற்க்கு வழி


வணக்கம் நண்பர்களே!
                    பதிவை எழுத தொடங்கலாம் என்று சிஸ்டத்தை தொட்டேன். நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார் அவரை தொடர்புக்கொள்ளும்பொழுது அவர் கேட்ட கேள்விக்கு பதிலை தந்தேன். உங்களுக்கு அதனை தருகிறேன்.

விடியற்காலையில் எழவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள் கேட்டார். நான் சொல்லதான் முடியும். நான் வந்து உங்களை எழுப்பமுடியாது அல்லவா. 

ஒன்றை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் வெற்றி பெறவேண்டும் என்றால் அவனுக்குள் மிகப்பெரிய வேகம் இருக்கவேண்டும். அந்த நெருப்பு இல்லை என்றால் ஒருத்தனால் வெற்றி பெறுவது கடினம். நாம் நினைத்த இடத்திற்க்கு செல்லவேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்கு நாம் நம்மை தயார் செய்யவேண்டும்.

கோபம் உள்ளவனுக்கும் காமம் உள்ளவனும் அதிகம் தூக்கம் வராது. அந்த காரணத்தால் மட்டுமே உங்களிடம் நான் சொன்னது நீ வெற்றி பெறவேண்டுமானால் கோபம் மற்றும் காமம் வேண்டும் என்று சொன்னேன்.

விடியற்காலையில் எழவேண்டுமானால் முன்கூட்டியே தூங்கசென்றால் போதும். விடியற்காலையில் உங்களின் உடல் அதுவாகவே எழுந்துவிடும். இரவு பனிரெண்டு மணிக்கு தூங்கினால் காலை பத்து மணிக்கு தான் உடல் எழும்.

ஆன்மீகமாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி உனக்குள் வெறி வேண்டும். நாம் ஜெயிக்க பிறந்தவன் என்று உங்களின் உள்மனதில் எந்த நேரமும் சிந்தனை இருந்தால் போதும் கண்டிப்பாக உங்களை தேடி நல்ல வாழ்க்கை வந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: