Followers

Friday, October 10, 2014

வெற்றி வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே!
                      நான் ஒரு சில நண்பர்களே சந்திக்கும்பொழுது அவர்கள் சொல்லும்பொழுது ஒரு சில விசயங்கள் எனக்கு பிடிபடவே மாட்டேன்கிறது. அவர்கள் உலகத்தி்ல் உள்ள  கோவில்கள் மற்றும் சாமியார்களை தேடி செல்லுகின்றனர் என்ற தகவல் தான் அது.

பல கோவில்களுக்கு நான் சென்று இருக்கிறேன் ஆனால் எந்த கோவிலையும் நான் வணங்குவது கிடையாது. கோவில்களை சுற்றி பார்ப்பேன் அதோடு சரி. வந்துவிடுவேன்.

நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் ஒரு கடவுள் மட்டும் வழிபாட வேண்டும். ஒரு சாமியாரின் ஆலோசனை மட்டும் கேட்டு நடந்து வந்தால் நாம் வெற்றி பெறமுடியும். பல ஆன்மீகவாதிகளை சந்தித்தால் கடைசியில் நீங்கள் தோல்வி மட்டும் தான் அடைவீர்கள்.

செல்வவளத்திற்க்கு கூட இப்படி தான் நான் சொல்லுவேன். நீங்கள் ஒரு தெய்வத்தை மட்டும் வணங்கிவரவேண்டும் என்பேன். உலகத்தில் உள்ள பெரிய கோடிஸ்வரர்கள் அனைவரும் ஒரு தெய்வத்தை மட்டும் தான் வணங்கிவருவார்கள். அதுப்போல் நீங்களும் ஒரு தெய்வத்தை மட்டும் வணங்கிவாருங்கள்.

மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு மனைவி மற்றும் ஒரு தெய்வம் ஒரு குரு மட்டும் அமைந்தால் மட்டுமே அவன் வெற்றி பெறமுடியும். பல உள்ளது என்றால் கண்டிப்பாக அது தோல்வி மட்டும் தான் அடையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: