Followers

Friday, October 31, 2014

கடவுளுக்கே பெண்கள் தேவை


வணக்கம் நண்பர்களே!
                      திருப்பூரில் எனது அறையில் காலையில் டிவியை ஆன் செய்து பார்த்தேன். அதில் பார்த்தால் அனைத்தும் ஆன்மீகம் சம்பந்தமாக எல்லா சேனலிலும் ஒளிப்பரப்பு செய்கிறார்கள். என்னடா உலகத்தில் அவ்வளவு பக்தி இருக்கின்றது என்று பார்த்தால் அதில் ஒரு உண்மை தெரியவந்தது. அதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று இப்பதிவை எழுதினேன்.

என்னோடு இருந்த ஒரு நண்பர் ஒரு சேனலை நான் மாற்றியே பொழுது அதிலேயே வையுங்கள் என்று சொன்னார். அந்த சேனலில் சிவன் கோவிலைப்பற்றி ஒரு பெண் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் சிவன் கோவில் என்றால் உங்களுக்கு பிடிக்குமா என்று கேட்டேன். 

சிவனை யார் கண்டது அந்த பெண் அழகாக இருக்கிறார். அந்த பெண்ணை பார்க்க தான் அந்த சேனலை வைக்க சொன்னேன் என்றார். என்னபா இது என்றேன். அவர் சொன்னார் கடவுளை பற்றி சொல்லுவதற்க்கே இங்கு பெண் தான் தேவைப்படுகிறார் என்றால் நமது ஆன்மீகம் எப்படிப்பட்டது என்று நீங்கள் பாருங்கள் என்றார்.

பல சாமியார்கள் நடத்தும் கோவிலில் கூட இப்படி தான் பெண்களை வைத்து ஆராத்தி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். நமது ஆட்களுக்கு எதிலும் ஒரு கவர்ச்சி வேண்டும் என்று நினைப்பார்கள் என்றார். 

இவர்கள் கடவுள் என்கின்ற பெயரில் பொம்பளை தான் காட்டுகிறார் என்றார். கிருத்துவ சேனல் ஒன்று உள்ளது அதில் பெண்களின் குத்தாட்டம் பார்க்க வேண்டும் என்றால் அதில் தான் நீங்கள் பார்க்க வேண்டும் என்றார். கடவுளுக்கே பெண்கள் இருந்தால் தான் வியாபாரம் நடக்கும் இல்லை என்றால் ஒரு கூட்டமும் வராது என்றார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: