Followers

Sunday, October 26, 2014

குலதெய்வம்


வணக்கம் நண்பர்களே!
                    சொந்த வேலையில் இருந்ததால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. சிரமத்திற்க்கு வருந்துகிறேன். தீபாவளி வாழ்த்தை சொல்லிய அனைவருக்கும் நன்றி. புதன்கிழமை அன்று சென்னை திரும்பிவிடுவேன் அதன் பிறகு தொடர்ச்சியாக உங்களுக்கு பதிவை தந்துவிடுகிறேன். சொந்த ஊரில் நெட் பிரச்சினை உள்ளது அதனால் பதிவு தருவதற்க்கு சிரமமாக இருக்கிறது. இனிமேல் தினமும் பதிவை தருவதற்க்கு முயற்சி செய்கிறேன்.

குலதெய்வத்தைப்பற்றி நான் நிறைய பதிவில் உங்களுக்கு சொல்லியுள்ளேன். மேலும் ஒரு புதிய கருத்தை இப்பதிவில் பார்க்கலாம். உங்களின் ஊர் கிராமத்தில் இருந்தால் உங்களுக்கு கிராம எல்லை காக்கும் தெய்வம் என்று ஒன்று இருக்கும். அதற்கு கீழ் உங்களின் குலதெய்வம் இருக்கும். அப்படி இருக்கும்பொழுது எல்லை தெய்வத்தை வைத்து உங்களுக்கு ஒருவர் தீங்கு செய்ய முற்பட்டால் அவர்களின் எண்ணம் நடைபெறாது.

எல்லை தெய்வத்திற்க்கு கட்டுப்பட்டு குலதெய்வம் இருந்தாலும் எல்லை காக்கும் தெய்வம் உங்களை தாக்க முற்படாது. ஏன் என்றால் குலதெய்வத்தை அந்த எல்லைக்காக்கும் தெய்வம் காப்பாற்றவேண்டும் என்ற காரணத்தால் எல்லை காக்கும் தெய்வத்தை வைத்து உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது.

இது அந்த காலத்தில் இயற்கையாகவே அமைந்த ஒரு விசயம். நீங்கள் குலதெய்வத்தை மட்டும் வணங்கி வந்தாலே போதும். உங்களுக்கு அனைத்தையும் செய்துக்கொடுத்துவிடும். பச்சைப்பரப்புதல் செய்து வருவதை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு வாருங்கள். பல பேர் இதனை செய்வதில்லை என்று நினைக்கிறேன். அனைவரும் செய்யுங்கள் அது ஒன்றே போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: