Followers

Monday, October 27, 2014

சோதிடமும் வாழ்வும்


வணக்கம் நண்பர்களே!
                   வாழ்க்கையில் ஒருவர் முன்னேற்றம் காணவேண்டும் என்றால் அவர் முதலில் அவர் இந்த உலகத்தில் புரிந்துக்கொள்ளவேண்டியது யார் சத்ரு யார் மித்ரு என்பதை தான் முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும்.

சோதிடம் சொல்லும் வாழ்க்கையும் இது தான். எந்த கிரகம் உங்களுக்கு சத்ருவாக இருக்கிறது எந்த கிரகம் உங்களுக்கு மித்ருவாக இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்துக்கொண்டால் போதும். உங்களின் ஜாதகத்தில் நல்ல கிரகம் என்பதின் சாரத்தில் நீங்கள் வாழ்ந்து வெற்றி பெறமுடியும்.

எந்த கிரகம் உங்களுக்கு நல்லது செய்கிறது என்று பார்த்து அந்த கிரகத்திற்க்கு மட்டும் நீங்கள் நல்ல முறையில் பரிகாரம் செய்துக்கொண்டு இருந்தால் போதும் அதன் வழியாக உங்களுக்கு அனைத்தையும் நல்ல விதமாக அமைந்துவிடும். 

உங்களுக்கே தெரியும் பொதுவாக எல்லா கிரகங்களும் நம்மை அடித்து காலி செய்ய தான் வந்து இருக்கிறது என்று நன்றாக புரியும். அப்படி இருக்கும்பொழுது எது நமக்கு நல்லது செய்கிறது என்று பார்த்து அந்த கிரகத்தின் நிழலில் வாழ்ந்துவிடலாம்.

உதாரணத்திற்க்கு செவ்வாய் கிரகம் உங்களுக்கு நல்லது செய்கிறது என்று வைத்துக்கொண்டால் செவ்வாய் கிரகத்தை மட்டும் நம்பி நாம் வணங்கிவரும்பொழுது செவ்வாய் நமக்கு தேவையானதைபெற்றுக்கொடுத்துவிடுவார்.

உங்களின் இயல்பான வாழ்விலும் யார் உங்களுக்கு நல்லது செய்வார் யார் உங்களுக்கு தீங்கு செய்வார் என்பதை புரிந்துக்கொள்வதில் தான் உங்களின் வாழ்வின் வெற்றி இருக்கிறது. இதனை புரிந்துக்கொண்டால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: