Followers

Friday, October 31, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு நண்பர் கேட்டார். அவருக்கு என்னைப்பற்றி நன்றாக தெரியும்.  நீங்கள் எந்த ஊரில் நிரந்தரமாக தங்குவீர்கள் என்று கேட்டார்.

எனக்கு நிரம்தரமான ஒரு இடத்தில் தங்குவது என்பது பிடிக்காத ஒன்று. சொந்தமான இடம் தஞ்சாவூரில் இருப்பதால் அங்கு மாதத்திற்க்கு ஒரு முறை சென்று வருவேன். அதோடு அங்கு அம்மன் கோவிலும் இருப்பதால் அங்கு சென்று வருவது உண்டு.

நிரம்தரமான ஒரு இடத்தில் நீங்கள் தங்கிக்கொண்டு இருக்கும்பொழுது உங்களுக்கு அந்த இடத்திலேயே ஒரு பிடிப்பு வந்துவிடும். அது அதிகமாக அதிகமாக அதனை விட்டு வெளியில் நீங்கள் வருவதற்க்கு பிடிக்காத ஒன்றாக மாறிவிடும். கடைசி காலத்தில் உயிர் பிரியும் நிலையில் அதிகமான வலியை அது தந்துவிடும்.

நான் இப்பொழுது பல ஊர்களுக்கு சென்று வருகிறேன். அப்படி செல்லும்பொழுது என்னையும் வளர்த்துக்கொள்ளமுடியும். வாழ்க்கையும் மிக எளிதாக எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கிறது. நீங்களும் அடிக்கடி வெளியூர் செல்லமுடியாமல் இருந்தால் கூட வருடத்திற்க்கு ஒரு முறையாவது ஒரு பத்து நாட்கள் வெளியில் சென்றுவாருங்கள்.

உங்களின் சொந்த ஊரில் வீடுகட்டிக்கொள்ளுங்கள் அதே நேரத்தில் பல இடங்களுக்கு நீங்கள் சென்றுவரும்பொழுது உங்களின் அறிவும் வளரும். நீங்களும் வளர்வீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: