Followers

Friday, October 31, 2014

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள்


வணக்கம் நண்பர்களே!
                      பல பதிவுகளில் நான் இயற்கையாக விளையும் பொருட்களை நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதாவது எந்த ஒரு இரசயான உரங்கள் இடாமலும் வளர்க்கப்படும் பயிர் வகையில் இருந்து உருவான பொருட்களை வாங்கி சாப்பிடுங்கள் என்று சொல்லியுள்ளேன்.

நாம் என்ன தான் ஓடி ஓடி பணம் என்று உழைத்தாலும் நல்ல உடல் நலத்தோடு இருக்கும்பொழுது மட்டுமே நாம் சம்பாதித்த பணத்தை வைத்து நன்றாக வாழமுடியும். 

இன்றைக்கு கடைகளில் விற்க்கும் பொருட்களை வைத்து சமைத்து உண்டு வருவதால் உடல் நலம் கெட்டு வருகிறது.நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை மருத்துவமனைக்கே கொடுக்கும் அவலம் இருக்கிறது.

நான் ஒவ்வொரு முறையும் எழுதும்பொழுது ஒரு சில நண்பர்கள் மட்டும் எங்களுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கும் பொருட்களை ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்கள். நானும் பல இடங்களுக்கு செல்லும்பொழுது எல்லாம் இதனைப்பற்றி விசாரித்துக்கொண்டு வருவேன். 

ஒரு இடத்தில் இப்படி சுத்தமான அதே நேரத்தில் இயற்கையான முறையில் தயாரிக்கும் பொருளை நான் பார்த்தேன். அவரிடம் நீங்கள் கொடுக்கமுடியுமா என்று கேட்டேன். அவரும் அதற்கு சம்மதித்தார். எல்லா பொருட்களையும் அவரால் இப்பொழுது செய்யமுடியாது படிப்படியாக தருகிறேன் என்று சொன்னார்.  அவரே இயற்கையான முறையில் பயிர் செய்து தரவேண்டும் என்பதால் அவர்க்கு காலம் தேவைப்படுகிறது. நானும் சம்மதித்தேன். 

விரைவில் அவரின் தயாரிப்புகளை நமது ஜாதககதம்பத்தில் கொடுக்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் வாங்கிக்கொள்ளலாம். இது எனது வியாபாரத்திற்க்கு என்று நான் கொடுக்கவில்லை. இயற்கையான பொருட்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்க்காக இதனை தருகிறேன். இதனை தயாரிப்பவரே உங்களுக்கு கொடுக்க இருப்பதால் நம்பிக்கையுடன் வாங்கி பயன்படுத்துங்கள். நல்ல உடல் நலத்தோடு வாழுங்கள்.

விரைவில் ...

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: