Followers

Wednesday, October 15, 2014

செல்வ வளம்


வணக்கம் நண்பர்களே!
                    என்னுடைய தொழில் நண்பர்களுக்கு என்று நான் சொல்லும் ஒரு விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். தொழில் அதிபர்களின் நோக்கம் மிகப்பெரிய அளவில் செல்வவளத்தை சேர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

செல்வவளத்தை நீங்கள் சேர்க்கவேண்டும் என்றால் சிவன் பெருமாள் வழிபாட்டை நீங்கள் செய்யகூடாது என்று சொல்லுவேன். அதனை நீங்களும் கடைபிடித்து வந்தால் போதும். 

இந்து மதத்தை பலரும் விரும்புவதற்க்கு காரணம் சிவன் மற்றும் பெருமாள் வழிபாடு. சிவன் மற்றும் பெருமாள் முக்திக்கு மட்டும் தான் வழி செய்வார்கள். முக்தியை நாடி வருபவர்களுக்கு இந்துமதம் வழிகாட்டும். இதில் உள்ள மிகப்பெரிய சிறப்பு முக்தியை அடைய அனைத்து வழியும் சொல்லும் செல்வவளத்திற்க்கு என்று தனி வழிபாடு உண்டு.

இப்பொழுது பைரவர் வழிபாடு அனைத்து இடத்திலும் சிறப்பாக நடைபெறுகிறது. பைரவரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களின் குடும்பத்தை பார்த்தால் குடும்பம் சீர்கெட்டு போய்விடும். குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக சென்றுவிடுவார்கள்.

பெருமாள் சிவன் வழிபாடு எல்லாம் அளவாேடு இருக்கவேண்டும். அதே கதி என்று கிடந்தால் உங்களை ஆண்டியாக மாற்றிவிடும். கண்டிப்பாக தொழில் செய்யும் நண்பர்களுக்கு இந்த வழிப்பாட்டை செய்ய சொல்லமாட்டேன்.




திருப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: