Followers

Tuesday, October 28, 2014

கிரகங்களின் விளையாட்டு


வணக்கம் நண்பர்களே!
                    பல கிராமங்களில் நான் பார்த்து இருக்கிறேன். ஊரில் உள்ள பொதுவான இடத்தில் அல்லது அரசாங்கத்திற்க்கு சொந்தமான கட்டடத்தில் வேலையில்லாத இளைஞர் அமர்ந்துக்கொண்டு சீட்டு ஆடுவதை பார்த்து இருக்கிறேன். கிராமபுறங்களில் இது நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

இளைஞர்கள் பல பேர்கள் நாளை பொழுதுபோக்காவே கழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு செயலும் நடக்க கிரகங்கள் தான் வழி செய்கின்றன. ராகு கிரகம் தன் ஆதிக்கத்தை அதிகமாகவே இப்பொழுது காண்பித்துக்கொண்டு இருக்கிறது.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் ஒருவர் கிளப்புகளில் சீட்டு ஆடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். அவர் எப்பொழுது சீட்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றுக்கொண்டு தான் இருப்பார். வாரத்தில் ஒரு நாள் தோற்பார். அந்த நாள் வியாழக்கிழமை.

குரு கிரகம் அவருக்கு தோல்வியை தந்துவிடும். அந்த நாள் மட்டும் அவர் சீட்டு விளையாடமாட்டார்.ஒரு சிலருக்கு தீய கிரகங்கள் அவர்களுக்கு நல்லதை செய்யும். தீயகிரகங்கள் ஆதிக்கம் பெறும்பொழுது நல்ல கிரகங்களின் நாளில் அவர்களுக்கு தீங்கு செய்துவிடும். நல்லவன் கெட்டவன் இருவரில் யார் வெற்றி பெறுகிறார் என்பது தான் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்கிறான். 

கிரகங்கள் ஆடும் ஆட்டத்தில் மனிதன் படுகிறான் என்பது தான் உண்மை. கிரகங்கள் தன் திருவிளையாடலை நடத்திவிடுகிறது. மனிதன் அதற்கு கிடந்து வேலை செய்கிறான்.

தெய்வ வழிபாடுகளில் தன் மனதை செலுத்தி கிரகங்களை மனிதன் வென்றால் அது மிகப்பெரிய வெற்றி. கிரகங்களை வெல்ல வேண்டும் அதற்கு வழிபாடு ஒன்று மட்டுமே தீர்வாக இருக்கமுடியும்.

நாளை சென்னை வருவதாக இருந்தேன். கொஞ்ச வேலை காரணமாக மதுரை செல்கிறேன். நாளை மதுரையில் என்னை சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: