Followers

Friday, October 31, 2014

முன்னேற்றம்


வணக்கம் நண்பர்களே!
                      என்னிடம் வரும் நபர்களை எப்படியும் முன்னேற்றம் என்பதை மிக குறுகிய காலத்தில் காட்டிவிடலாம். குறைந்தது ஆறு மாதக்காலம் இருந்தாலே போதும் ஒரளவு அனைத்தையும் கொடுத்துவிடலாம். 

அம்மனை வைத்து வேலை செய்யும்பொழுது சம்பந்தப்பட்ட நபர் முன்னேற்றப்பாதையில் செல்ல ஆரம்பிப்பார். பல வருடங்களில் விரல் விட்டு என்ன கூடிய நபர்கள் மட்டும் தான் என்னிடம் பயன்பெறுகிறார்களே தவிர பல பேர் வருவதும் போவதுமாக இருக்கின்றனர்.

ஆறு மாதக்காலத்தில் முன்னேற்றத்தை காட்டமுடியும் என்கிறேன். இதுநாள் வரை பல பேரை நாம் உருவாக்கியிருக்க முடியும் ஏன் முடியவில்லை என்றால் மனிதனின் திருட்டு புத்தியை இதற்கு காரணம் காட்டலாம.

நான் ஒருத்தருக்கு வேலை செய்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக  வேலை செய்வேன். நான் செய்த வேலைக்கு ஒருத்தர் ஒழுங்கான முறையில் பணம் செலுத்தும்பொழுது மட்டுமே அவருக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்பை கொடுக்கமுடியும்.

நம்ம ஆட்கள் வருவது எதையாவது ஒன்றை பெற்றுவிட்டால் உடனே ஒடிவிடுவதுமாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்படி வேலை செய்யமுடியும். நான் பல பேர்களிடம் சொல்லுவேன். ஒரு வாய்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு ஒடிவிடாதீர்கள். என்னிடம் நிறைய விசயங்கள் இருக்கின்றது நீங்கள் மிகப்பெரிய அளவில் செல்லலாம் என்பேன். என்ன செய்வது அவர்களின் விதி அவர்களை விடுவதில்லை.

புதியதாக வருவது தவறு இல்லை ஆனால் கண்டிப்பாக எனக்கு சேரவேண்டியதை கொடுக்காமல் நீங்கள் சென்றால் கண்டிப்பாக உங்களால் இந்த ஜென்மத்தில் முன்னேற்றம் என்பதே கிடையாத அளவிற்க்கு அம்மன் செய்துவிடும்.

மிகப்பெரிய அளவில் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக என்னை தேடி வரலாம். நான் கண்டிப்பாக உங்களை ஆறு மாதத்திற்க்குள் ஒரு நல்ல நிலையில் வைத்துவிடுவேன். நான் ஒடமாட்டேன். நீங்கள் ஒடாமல் இருந்தால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: