Followers

Monday, October 13, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்பொழுது சொன்னார். உங்களின் பதிவுகளில் அதிகமாக சொல்லும் விசயம் பணமாக இருக்கிறது பணம் தான் ஆன்மீகமாக என்று கேட்டார்.

சோற்றுக்கு வழியின்றி தெருவில் உட்கார்ந்தால் அது ஆன்மீகம். பணத்தோடு நல்ல இருந்துக்கொண்டு சென்று கடவுளை வணங்குங்கள் என்று சொன்னால் தவறாக இருக்கிறது.

ஒருத்தருக்கு கூட அவ்வளவு எளிதில் ஞானம் கிடைத்துவிடாது. ஞானம் வேண்டும் என்றால் நீங்கள் நல்ல முறையில் வாழ்ந்து இருக்கவேண்டும். அப்படி வாழ்ந்து இருந்தால் மட்டுமே அடுத்த இலக்கான ஆன்மீகத்தை நோக்கி பயணம் அமையும்.

இந்தியாவில் தவறாக சோற்றுக்கு வழி இல்லாதவனை பார்த்து ஆன்மீகவாதிகள் என்று சொல்லிவிட்டார்கள். நல்ல சொகுசாக முதலில் வாழ்வதற்க்கு ஆன்மீகத்தை பயன்படுத்திக்கொள்வதற்க்கு நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

பணம் மட்டுமே ஆன்மீகம் கிடையாது அதனை தாண்டி நிறைய இருக்கிறது ஆனால் முதலில் நீங்கள் பணத்தை வைத்து அனுபவிக்க தெரிந்துவைத்திருக்கவேண்டும் அதன் பிறகு ஆன்மீகத்தை பார்த்துக்கொள்ளலாம்.
.
நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: